Monday, July 27, 2009

நீரின்றி உயிரில்லை! அன்பே நீயின்றி நானில்லை!!


என் கண்ணுக்குள் நுழைந்து
கண் இமைகளில் ஒலி தந்தாய் நீ!

பகலாய் என்னுள் நுழைந்து
என்னுள் இருந்த இருளை நீக்கினாய் நீ!

மாலைப் பொழுதின் மயக்கமாக நான்!
என்னுள் சுவாசிக்கும் இசையாக நீ!

நீரின்றி உயிரில்லை இவ்வுலகில்!
அன்பே...
நீயின்றி நானில்லை ஒருபோதும்!!

-பிரியங்கா.