Wednesday, July 22, 2009

'இட்லி'கள் மீது நடத்தும் தாக்குதல்!!


எனக்கு ஒரு 5வயசு இருக்குமுங்க அப்போ!! எனக்கு எங்க வீட்டு தோட்டத்துல 'இட்லி' ஊட்டிக்கிற்றுந்தாங்க என் அம்மா.. நான் பாதி இட்லி சாப்டுட்டு போதும்னு அடம் பிடிச்சிக்கிட்டிருந்தேன்!! அம்மா என்ன சாப்ட வெக்க போராடிற்றுந்தாங்க...



அப்போ, பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி வெளில வந்தாங்க... அம்மா என்னோட போராடிக்கிற்றுக்ரத பாத்துட்டு என்னம்மா? என்னாச்சு? கொழந்தை என்ன சொல்றா?னு கேட்டாங்க.. அதுக்கு அம்மா நான் பாதி இட்லியைச் சாப்டுட்டு போதும்னு சொல்றேன்னு சொல்ல, அந்த மாமி என்னைப் பாத்து....



"என்னடி கொழந்தே? அர இட்லி சாப்டா எப்டி வளருவ நீ? உன் வயசுக்கு நல்லா ஒரு 5இட்லி 6இட்லி சாப்ட வேணாமோ? நான் லாம் உன் வயசுல அப்படித் தான் சாப்ட்டேன்னு சொல்லிட்டு... நல்லா சாப்டா தான் நல்லா ஆரோக்கியமா வளரமுடியும்னு சொன்னாங்க!



அதற்க்கு நான் வாயைப் பிளந்து கொண்டு...

"5இட்லி, 6இட்லியா? அய்யய்யோ!! ஆன்டி... அவ்ளோ இட்லி சாப்டா அதுக்கு பேர் சாப்டறதில்ல ஆன்டி, இட்லி ய நாம தாக்ரோம்னு அர்த்தம்!" என்று சொல்ல, அந்த மாமி வாயடைத்துப் போனார்..