Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, August 18, 2009

இன்னும் கொஞ்ச நாளுக்கு உங்களுக்கு லீவ் விட்டுட்டேன்ங்க!!


இன்னும் கொஞ்ச நாளைக்கி உங்கள தொல்ல பண்ணாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ங்க நானு... இந்தியாவுக்கு கிளம்பறேன் இந்த சனிக்கிழமை!! வேணும்ங்கற துணி மணி, வீட்டுக்காக வாங்கின எல்லாத்தையும் சரி பாத்து ஒன்னொன்னா எடுத்து வெக்கணும்!! என் கிறுக்கல்கள் பக்கம் வர முடியாது... :( :) அதான், இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு நாள் பொழச்சிட்டு போங்கன்னு லீவ் விட்டுட்டேன் உங்க எல்லாருக்கும்!! ;)



இருங்க இருங்க... ரொம்ப சந்தோஷப் படாதீங்க... ஊருக்கு போனதும் இல்லைன்னாலும், கூடிய சீக்கிரம்(செப்டம்பர் மாசம் பாக்கலாம்) திரும்பவும் வருவேன் உங்கள தொல்ல பண்றதுக்கு!! :) அதுவரைக்கும் வேணும்னா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கோங்க... ;)



தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Monday, August 10, 2009

பன்றிக்காய்ச்சல் கிருமியும்...அது பரவாமல் இருக்க பின்பற்றவேண்டிய வழிகளும்...


"வெளி நாடுகள்ல சுகாதாரமா இருப்பாங்க, நாமளும் அங்க போனா அப்டி இருக்க முடியும்...!!" ஒரு காலத்துல இப்டி தான் நெனச்சிற்றுந்தோம் எல்லாரும்... நம்ம இந்தியர்கள் நாலும் இந்தியான்னாலும் அவ்ளோ கேவலம் அவனுங்களுக்கு(வெள்ளக் காரனுங்களுக்கு)..

என்னமோ அவனுங்க எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கற மாறியும், நாமல்லாம் எதோ குப்ப மேட்டுல இருக்கற மாறியும் தான் பாப்பானுங்க நம்மள?! என்னத்த சுகாதாரமுங்க இருக்கு அங்க?? சும்மா சொல்லிக்கவேண்டியது தான்... இன்னும் சொல்லப் போனா மேலை நாடுகள்லேருந்து தான் எல்லா விதமான புதுப் புது நோயும் வருது நம்ம ஊருக்கு! :( "எய்ட்ஸ்"ங்கற கொடுமை இவனுங்க கிட்டேருந்து தான் நமக்கு தொத்திக்கிச்சி... அது போதாதுன்னு இப்ப புதுசா "பன்றிக்காய்ச்சல்"னு ஒரு கொடுமை வந்து எல்லாரையும் கலங்க வெச்சிக்கிற்றுக்கு... எய்ட்ஸ் கிருமி (HIV) பரவாம இருக்க நாம கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துட்டா மட்டும் போதும்...

ஆனா... இப்போ வந்திருக்கற பன்றிக் காய்ச்சல் கிருமி(H1N1) காத்துல பரவக்கூடிய ஒன்னு! இதக் கட்டுப்படுத்த முடியாம, அந்தக் கிருமி தாக்கியத கண்டுபிடிக்கறதுக்கு முன்னாலேயே இறந்து போனவங்களோட(போறவங்களோட) எண்ணிக்க எரிக்கிட்டேத் தான் போகுது... அப்பாவி மக்கள் எத்தன பேர் இதனால அவதிப் படறாங்கன்னு நினைக்கரச்சே கதி கலங்குது...

பன்றிக்காய்ச்சல் "FLU" என்னும் வகையைச் சேர்ந்தது... இவ்வகையான நோய்க்கு தடுப்பு ஊசி இருக்கு.. ஆனா, பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தற கிருமிக்கு(H1N1) இவ்வூசியைப் போட்டாலும் எவ்விதப் பயனுமில்லை... இன்னும் H1N1 கிருமிக்கு தடுப்பு ஊசி தயாரிக்கப்படலைங்கறது ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம்...
இந்தப் பன்றிக் காய்ச்சல் வராம தடுக்க தடுப்ப ஊசி(vaccine) ஏதும் இன்னும் இல்லைன்னாலும், இந்தக் காய்ச்சல் பரவாம தடுக்கறதுக்கு ஒரு சில வழிகள் இருக்கு...

அவை பின்வருமாறு...

1. இடைவெளி:

உடல் நிலை சரியில்லாதவர்களிடத்தில்( இருமல், தும்மல், காய்ச்சல் ) சற்று ஒதுங்கி உக்காருங்கள்.

2. ஓய்வெடுங்க:

உங்களுக்கு இருமலோ, தும்மலோ, காய்ச்சலோ இருந்தா வெளில(பள்ளி, கல்லூரி,அலுவலகம்,...) போகாம வீட்லயே இருந்திடுங்க. இதன் மூலம், ஒருவேளை உங்களை இந்தக் கிருமி தாக்கி இருந்தா அது மத்தவங்களுக்கு பரவாம நீங்க தடுக்க முடியும்!

3. மறைக்கவும்:

உங்களுக்கு தும்மலோ, இருமலோ வந்தா ஒரு கைத்துணியை(handkerchief) வைத்தோ அல்லது பயன்படுத்திய பின் தூக்கி எரியக்கூடிய காகிதத்தையோ (tissue paper) வைத்து உங்கள் வாயை மறையுங்கள்...

4. கை கழுவுங்கள்:

அடிக்கடி உங்கள் கையை கழுவுங்கள்... இதன் மூலம், கிருமி தாக்குதலை ஓரளவு கட்டுப் படுத்தலாம்... அடிக்கடி கை கழுவ இயலாதவர்கள் "alcohol based gel" (தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும் ) பயன்படுத்தவும்...

5. தொடாதீர்கள்:

இந்தக் கிருமி ஒரு மேஜையின் மீதோ அல்லது வேறெதும் பொருளின் மீதோ சில நொடிகள் உயிருடன் இருக்க வல்லது... எனவே, தேவையில்லாமல் உங்கள் கண், மூக்கு மற்றும் வாயினைத் தொடாதீர்கள்! ஏனென்றால் நீங்கள் உங்களையும் அறியாமல் அந்தக் கிருமியைத் தொட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது!

6. முக மூடி:

தேவைஎனில் உங்கள் முகத்தை (கண்களைத் தவிர்த்து) ஒரு முக மூடியை(mask) அணிந்து கொண்டு செல்லுங்கள்!

குறிப்பு:

இதெல்லாம் நான் கேள்விப்பட்ட, எனக்குத் தெரிஞ்ச வழிகள் (preventive measures)... வேற ஏதாவது விட்டுப் போயிருந்தா தயகூர்ந்து சொல்லுங்க!

நன்றி!!






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Tuesday, July 28, 2009

கிருஷ்ணாவின் அசட்டுத்தனமான சாமர்த்தியம்...!!



கிருஷ்ணா என் எதிர் வீட்டில் வசிக்கும் அக்காவின் குழந்தை.. அவன் ரொம்ப சுட்டி... எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்... உதாரணத்திற்கு, அவனுக்கு ஒரு கார் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதை உருட்டிக்கொண்டுபோய் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளியும் இருக்காது.. அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்ய நினைப்பான்.. அவ்வளவும், கார் அவன் கையில் வந்த ஐந்து நிமிடங்களில்..!!



முதலில்... அவன் பெற்றோர் "அடடா.. எவ்வளவு ஆராய்ச்சி குணம் பாருங்க என் பையனுக்கு" என்பார்கள்... போகப் போக இவன் 'சில்மிஷங்கள்' அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலைத் தான் தந்தது.. அப்படி என்ன தான் செய்கிறான் என்கிறீர்களா?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மேல படியுங்க..



ஒரு முறை... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஏதும் சட்டென்று கிடைக்காதலால் கிருஷ்ணாவின் தந்தை ஒரு பழைய காகிதத்தைப் பற்றவைத்து அதன் பின் மெழுவர்த்தியை தேடி எடுத்துப்பற்ற வைத்தார்... மறுநாள் காலையில் விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு, சன்னல் கதவுகளையும் சாத்தி விட்டு இருட்டில் எதோ செய்து கொண்டிருந்தான் கிருஷ்ணா... தற்செயலாக இவனைத் தேடிவந்த இவன் தந்தைக்கு ஒரு நிமிடம் உயிரே நின்று விட்டது.. அவன் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா?? மேஜை மேல் வைத்திருந்த அவனுடைய தந்தையின் சட்டையை பற்ற வைத்து விட்டு தூரத்தில் வந்தமர்ந்து கொண்டு அது எரிகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருக்கிறான்...



அதன் பின் அதன் மேல் தண்ணீரை ஊற்றி அதை அனைத்து விட்டு என்னடா இது என்ன செய்ற நீனு கேட்டா... அவன் சொன்ன பதில்...

"துணிய எரிச்சா எவ்ளோ வெளிச்சம் வருதுன்னு பாத்துற்றுந்தேன்பா!!"




இவன் அட்டகாசம் தாளாமல் 3வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டனர்... அங்கும் இவன் சில்மிஷங்கள் ஓய்ந்தபாடில்லை! மற்ற குழந்தைகளின் பொருட்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது, அதை உடைத்து பார்ப்பது என்றெல்லாம் செய்ய ஆரம்பித்தான்... இவன் கேட்ட பொருளை மற்ற குழந்தைகள் கொடுக்கவில்லையானால் அதைப்பிடுங்கி தூர எறிவது என்றெல்லாம் செய்து கொண்டிருந்தான்...




இவன் சில்மிஷத்தைக் குறைக்க நினைத்த ஆசிரியர் சக மாணவ மாணவியர் முன் திட்டினால் அவனுக்கு புரியும் என்று நினைத்தாரோ என்னவோ.. அவனை சக மாணவ மாணவியர் முன் அப்படி செய்யக் கூடாது என்று அதட்டினார்... அப்போது ஒரு மாணவி அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள்! இவனுக்கு கோபம் வந்திருக்கும் போல...



மதியவேளை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலைமுடியை (ஒரு பக்கத்து ஜடையைமட்டும்) 'பிளேடு' வைத்து அறுத்து விட்டான்... அறுத்தது மட்டும் அல்லாது அதை அவளிடம் காட்டி அவளை வெறுப்பேற்றி அதை குப்பைக் கூடையில் வீசி எரிந்து விட்டு வந்து அவன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்...



ஒ வென அந்தப் பெண் வீரிட்டு அழ அந்த வகுப்பாசிரியர் வகுப்பிற்கு விரைந்து வந்தார்.. கிருஷ்ணாவின் இந்த வேலையைக் கண்ட அவருக்கு கோபம் வர அவனை அழைத்து அடிக்க முற்பட்டார்.. அப்போது அவன், ஏன் டீச்சர் என்ன அடிக்கறீங்க? அவ எண்ணப் பாத்து சிரிச்சா.. எனக்கு கோபம் வந்துச்சி.. அதனால்தான் நான் அவ முடிய அறுத்துட்டேன்.. நான் அவ முடிய அருத்தேன்னு உங்களுக்கு கோபம் வந்துச்சின்னா நீங்க என் முடிய அறுத்துப் போட்டுடுங்க! என்று தன் மொட்டைத் தலையில் ஆங்காங்கு முளைத்திருக்கும் முடியைக் காண்பித்தான் வெகு சாமர்த்தியமாக.. அவன் சொன்ன பதிலில் சிரிப்பு தான் வந்தது ஆசிரியருக்கு!!

விமானங்கள்!!



இந்த வீடியோ எனக்கு மெயில் ல வந்ததுங்க..

இதுல கொஞ்சம் இருட்டா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் இரவு பொழுது... வெளிச்சமா தெரியற பக்கம் இருக்கும் நாடுகளில் பகல் பொழுது...

மஞ்சள் நிறத்தில் அங்கும் இங்குமாக அலையும் பூச்சிகள் போலக் காணப்படுவது விமானங்கள்!!

ஒரு நாளில் எத்தனை விமானங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்றும் எப்போது திரும்ப வந்து சேர்கின்றன என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....

பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நாடுகளுக்கும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பும் விமானங்கள் தான் அதிகம்...


அழகான பூந்தோப்பு...


கீழ்காணும் லிங்கை அழுத்தி பின் அதனுள் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்து இழுக்கவும்... ( click and drag anywhere and all throughout the page/ wherever you like!)

அழகான பூந்தோப்பு நொடியில் உங்கள் கண்முன்னே!!

http://www.procreo.jp/labo/flower_garden.swf

பார்த்து விட்டு பிடித்திருந்தால் பின்னூட்டமும் உங்கள் வாக்கும் அளிக்கவும்!