Thursday, July 16, 2009

இந்தியன் நா அவ்ளோ கேவலமா?


ஜெர்மனி ல எங்க வீட்டு பக்கத்துல ஒரு தமிழ் குடும்பம் இருக்குங்க... அந்த வீட்ல இருக்கும் கலைச்செல்வி என்னோட தோழி தானுங்க... ரொம்ப நல்லவங்க.. அமைதியானவங்க, நற்பண்பு கொண்டவங்க, சாதுவானவங்க, வாயில்லா பூச்சி ... இன்னும் சொல்லிக்கிட்டே போலாமுங்க!

சரி, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்! அந்த கலைச்செல்வி அண்மையில் சென்னைக்கு போயிருக்காங்க... துபாய் வழியா தான் போனாங்க... துபாய் duty free பத்தி தான் உங்களுக்கு தெரியுமே! இவங்களும், தன் அக்கா மகளுக்கு ஒரு பொம்மைய வாங்கலாம்னு போயிருக்காங்க.... ஒரு பொம்மைய தேர்வு பண்ணி அத வாங்கிக்கலாம்னு counter க்கு போயிருக்காங்க! அங்க ஒரு ஆளு ( dubai shek போலும்! ) இவங்கள மேலையும் கீளையுமா பாத்திருக்கான்... இத கவனிக்காத நம்ம கலை யும் இத pack பண்ணுங்கன்னு சொல்லிட்டு காசு எடுத்து நீட்டி இருக்கார் ( euros )... ஆனா அந்த ஆளு இவர் கிட்ட வம்பு பண்ணனும் நு நெனச்சானோ என்னவோ euros லாம் வாங்கறதில்ல நு சொன்னானாம்... அந்த ஆளோட நோக்கம் புரியாத இவர் சரி அப்போ இந்தியன் ருபீஸ் ( indian rupees ) வாங்கிப்பீங்கலானு நம்ம காசை எடுத்து நீட்டி இருக்கார்!

இதுக்காகவே காத்துக்கிட்டிருந்தான் போல அந்தாளு!

"WE ACCEPT ALL CURRENCIES EXCEPT BLOODY INDIAN CURRENCY" நு சொல்லி இருக்கான்... இப்போது தான் அவனுடைய எண்ணம் புரிந்திருக்கிறது நம்ம கலைக்கு!
நான் தான் ஏற்கனவே சொன்னேனேங்க கலை ரொம்ப சாது, வாயில்லா பூச்சின்னு... பாவம், என்ன செய்றதுன்னு தெரியாம அங்கிருந்து வந்துற்றுக்கார்.. ஆனா இந்தியனையும் இந்திய நாட்டையும் கேவலமா பேசினவன சும்மா விட்டுட்டு வந்துட்டோமேங்கர வருத்தம் தாங்காம அவர் கண்லேருந்து மாலை மாலையா கண்ணீர் வழிந்திருக்கு!

இப்போ சொல்லுங்க.... இந்தியன் நா அவ்ளோ கேவலமா?