Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, August 13, 2009

கதை கதையாம் காரணமாம்!!


"எல்லா வேலையும் நானே தான் பாக்கணும், இதென்ன வீடா இல்ல சத்திரமா? எல்லா வேலையையும் நான் மட்டும் செய்ய முடியாம இங்க கெடந்து தவிக்கறேன், போதாதுன்னு என்ன வேல வாங்கிக்கிட்டு, சொகுசா உக்காந்த்துக்கிட்டு பதம் பாக்கறீங்க?!" சந்தடி சாக்கில் உக்கார்ந்த இடத்திலிரிந்து அதிகாரம் செலுத்தும் தன் மாமியாரை சாடினாள் லக்ஷ்மி!










லக்ஷ்மிக்கு அன்பான கணவன், 2 குழந்தைகள்- ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை.. ஆண் பிள்ளை மூத்தவன்... படு சுட்டி... இளையவள் அமைதியின் உருவம்.. கணவன்(சந்திரன்) அன்பானவன், ஆனால், ஊருக்காக பயப்படுபவன்... சொந்த பந்தங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் இயல்புடையவன்! இவர்கள் சென்னையில் வசிப்பதால் ஊரிலிருந்து எந்த விசேஷத்துக்கு எவர் வந்தாலும் இவர்கள் வீட்டில் தான் ஐக்கியமாவார்கள்!




வந்தவர்கள் எதிரில் தன் மருமகள் லக்ஷ்மியை மேலும் கடிந்து விழுவாள் மாமியார் காரி... "இதென்னடி? சாம்பார்ல இவ்ளோ கடுக போட்டிருக்க? உங்கப்பன் வீட்டு சொத்தா? என் பய்யன் கஷ்டப்பட்டு, இராத்திரியும், பகலுமா உழச்சி சம்பாதிக்கறான்.. நீ என்னடான்னா இப்டி வீணா செலவு பண்ற..." வந்தவங்களுக்கு உக்காந்த இடத்துல உபசரிப்பு வேறு! காபி குடுத்தா அத குடிச்சிட்டு அந்த டபராவ கூட எடுத்துட்டு போயி சமயக் கட்டுல போட மாட்டாங்க! அவங்க போடலாம்னு எந்திரிச்சாலும் இந்த மாமியாக் காரி விடமாட்டா.. அங்கிட்டு வெச்சிடுங்க.. எல்லாம், அவ எடுத்துக்டு போவா ம்பா...




சமயலரையிலேருந்து லக்ஷ்மி தனக்குத் தானே முனுமுனுத்துக்குவா... "ஆமா ஆமா... அதான், சம்பளமில்லாத வேலைக்காரி நானொருத்தி இருக்கேனே இந்த வீட்ல! யாரும் சமயக் கட்டுப் பக்கம் வராதீங்க"... எத்தன வேல னு தான் அவ தனியா செய்வா பாவம்? காலைல எந்திரிச்சது லேருந்து வாசல் தெளிச்சி கோலம் போட்டு, சமையல் செஞ்சிட்டு, வீடு பெருக்கி தொடச்சிட்டு, துணி துவச்சி காய போட்டு, சாமான் கழுவி போட்டு... ஹப்பாடா னு உக்காந்தா, அப்போ தான் ஏதாவது வேல சொல்லுவா மாமியா காரி!




இது போதாதுன்னு, நாத்தனாரோட பொண்ணு மேல்படிப்பு படிக்கறதுக்கு இங்கயே வந்து டேரா போட்டுட்டா! ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல... அஞ்சு வருஷம் இங்கயே தங்கிட்டா!! சரி சின்ன பொண்ணு தான னு அவளுக்கும் தன் பிள்ளைகளுக்கு செய்யற மாறித் தான் செஞ்சா லக்ஷ்மியும்... ஆனா, அந்த பொண்ணு செய்யரதை எல்லாம் செஞ்சிக்கிட்டு, அவ பாட்டியோட கூட்டு சேந்துக்கிட்டு லக்ஷ்மிய கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டா...


ஒரு நாள், அவளோட(லக்ஷ்மியின் நாத்தனார் மகள்) புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டுத் தரச் சொல்லி அவளோட மாமாவ(சந்திரன) நச்சரிக்கவே, அவரும், போட்டுத் தரேன் னு, புத்தகம் எல்லாத்தையும் வாங்கி வெச்சிக்கிட்டு, அட்டைகள போட ஆரம்பிச்சாரு! அட்ட போடற மும்மரத்துல... ப்ளேட பக்கத்துல தரைல வெச்சிட்டாரு...



தன் அப்பா அந்த ப்ளேடை வெச்சி அட்டைய கிழிக்கரத பாத்துக்கிட்டே அவரோட மூத்த மகன்(ஒரு இரெண்டு வயசு இருக்கும் ங்க) திடீர்னு பக்கத்துல வந்து அத எடுத்து பாத்திருக்கான்,... அட்டைய குடுக்க சொல்லி கேட்டிருக்கான்.. ஆனா, அந்த பொண்ணு அட்டைய எல்லாம் எடுத்து இன்னொரு பக்கமா வெச்சிட்டு தர முடியாதுன்னு சொல்லி இருக்கா... இந்த (வாலு) கொழந்த உடனே ப்ளேட வெச்சி அவனோட கைய அருத்துகிற்றுக்கான்!! ரத்தம் ஆறா ஓடவே வலில அழ ஆரம்பிச்சிட்டான், அத பாத்துட்டு அவனோட அம்மாவும் அப்பாவும் பதறி அடிச்சிக்கிட்டு போயி மருத்துவ மனைக்கு கொழந்தைய தூக்கிக்கிட்டு ஓடி, கொழந்த திரும்பவும் சிரிக்கரதுக்குள்ள ஒரு வழியா ஆயிட்டாங்க ரெண்டு பேரும்!!




எதோ... காயம் அவங்க அம்மா அப்பாவுக்கு பட்ட மாறி அவங்க தான் ஓய்வெடுத்தாங்க வீட்டுக்கு வந்து! அந்தச் சுட்டிப் பய தாவி குதிச்சி விளையாட போயிட்டான்!!








இந்தக் குட்டிக் கண்ணன் பிறந்தது கிருஷ்ணாஷ்டமி அன்னிக்கி தான்.. குட்டிக் கண்ணன் தான் அவங்களுக்கு பொறந்திருக்கான் னு அவனுக்கு அவங்க அப்பா 'கோகுலகிருஷ்ணன்' னு பேர் வெச்சாரு! பேர் வெச்சது நாலயா, இல்ல அந்த நாள்ல பொறந்தது நாலயானு தெரியல... அந்தப் பேருக்குரிய வேலைகளைத் தான் அந்தப் பய்யன் செய்ய ஆரம்பிச்சான்!!




................. தொடரும்!! ;)





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

Thursday, July 30, 2009

பாக்யலக்ஷ்மி...!!


தமிழ்ச்செல்வன் ஒரு பிரபல வங்கி ஊழியன். அனைவரிடமும் வெகு இயல்பாகப் பழகுவான். அன்பும், பண்பும் மிக்கவன். ஆனால் கொஞ்சம் கோபம் அதிகம். சட்டென்று எரிந்து விழுவான். பின்பு, தன் தவறை உணர்ந்து தானே சென்று தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு விடுவான், அது யாராக இருந்தாலும் சரி!

ஆனால் ஒரு முறையும் அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்ததே இல்லை அவன் மனைவி பாக்யலக்ஷ்மி! பல முறை இவன் அவளைக் கோபித்திருக்கிறான், திட்டி அவளைப் புண்படுத்தி இருக்கிறான். ஆனால் இவன் கோபம் தணிந்து இவன் மன்னிப்பு கேட்க நினைப்பதற்குள் பாக்யா முந்திக்கொள்வாள்.

ஒருமுறை, அலுவலகம் செல்லும் பொழுது மறதியாலும், கிளம்பும் அவசரத்தாலும் அன்று எடுத்துச்செல்ல வேண்டிய காசோலையை மறந்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டான். பாதி வழியில் தான் அவனுக்கு காசோலையை மறந்து போன விடயம் நினைவிற்கு வந்தது! இவனுக்கு உடனே தன் மனைவியின் மீது தான் கோபம் வந்தது(அதன் முன் தினம் அந்த காசோலையை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று அவளிடம் கூறி இருந்தான்!). காசோலையை எடுத்துச் செல்ல வேண்டி வீட்டிற்கு திரும்பிவந்துகொண்டிருந்தான்.

வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கையில் தற்செயலாக, அந்த காசோலையைப் பார்த்த அவன் மனைவிக்கு நேற்று தன் கணவன் சொன்னது நினைவிற்கு வரவே, உடனே அதை எடுத்துக் கொண்டு தன் கணவன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். வழியில் தன் கணவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று அதனை ஒப்படைத்தாள்! ஆனால், தமிழ்ச்செல்வன் மிகுந்த கோபத்துடன் அவளை முறைத்து விட்டு தாம் வீதியில் நிற்கின்றோம் என்பதையும் பாராமல் அவளைத் திட்ட ஆரம்பித்தான். அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக கேட்டு விட்டு பின் மன்னிப்பும் கேட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினாள்!

ஏனோ, அன்று முழுவதும் தமிழ்ச் செல்வனுக்கு தன் வேலையில் ஈடுபாடில்லாமல் போனது. காசோலையை மறந்தது மட்டுமல்லாது, தன் மனைவியை அவசியமில்லாமல் திட்டியது அவன் நினைவிலேயே இருந்தது. "இது இரண்டுமே என் தவறு! ஆயினும், என்னவள் என்னை சிறிதும் கோபிக்காமல் பொறுமை காத்தாள்! என் கோபத்தால் நான் அவளை புன்படுத்திவிட்டேனே !" என்று வருந்தினான். அன்றிரவு எதுவுமே நடக்காதது போல வெகு இயல்பாக தன் கணவனிடம் பேசினாள் பாக்யா...

இவ்வாறாக, எப்போதுமே தன் மனைவியின் பொறுமையையும் தன் மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் கண்டு வியப்பான் தமிழ்ச்செல்வன்!!

ஒரு நாள், இருவருமாக உட்கார்ந்து தம் கல்யாணப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும், எவரேனும் வந்து கதவைத் தட்டினால் கூடக் கேளாதவர் போல...அதில் மூழ்கியே விட்டனர்! சுவாரஸ்யமாக புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில் தமிழ்ச்செல்வனிடம் பாக்யலக்ஷ்மி தம் கல்யாணத்தில் எதைப் பற்றியோ சொல்லி சிரிக்க அவனுக்கு கோபம் வீறிட்டது... கோபம் கொண்ட அவன் எதோ கத்த ஆரம்பிக்க பாக்யலக்ஷ்மிக்கு எதுவும் விளங்கவில்லை! அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்ல முயல்கிறாள்... ஆனால், அவளால் அது முடியாமல் போனது...

இம்முறை ஏனோ பாக்யாவும் வாதிக்கத் தொடங்கினாள்! வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் பேசிக்கொள்வதையும் நிறுத்தி விட்டு இரவு சாப்பிடாமலேயே உறங்கிவிட்டனர்! மறுநாள் காலை எழுந்ததும் அரக்க பறக்க எதையோ சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு ஓடி விட்டான் தமிழ்ச்செல்வன். அலுவலகத்தில் வேலைபளுவால் மதியம் வரை அவனால் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. மதியம் சாப்பிடும் சமயம் தான் அவனுக்கு பாக்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிற்று...

சரி தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம் என்று நினைத்தவன் தன் கைப்பேசியை எடுத்து பாக்யாவின் கைப்பேசி எண்ணைத் தேடினான். ஆனால் பாக்யா என்ற பெயரே அதில் இல்லை! ஐயோ.. என்ன இது? கோபத்தில் நேற்று அவள் எண்ணை அழித்துவிட்டோமா என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அவனுடைய கைப்பேசி அழைப்பு மணியை எழுப்பியது!

"உன் செல்லம் பாவம் ல? என்ன மன்னிச்சிடு டா!"

என்ற வரிகள் தோன்றியது அவன் கைப்பேசியில்... தன் கைப்பேசியை அழுத்திப் பேசினான்... பேசியது பாக்யா!! நேற்று இரவே தான் தூங்கும் சமயம் தன் பெயரை இப்படி மாற்றி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு விளங்கியது. .. பேசிவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டு அவன் நினைத்த வார்த்தைகள்...

"அடிக் கள்ளி! இம்முறையும் நீயே முந்திவிட்டாயடி!!"