Tuesday, September 29, 2009

கோமாளியா தெரிஞ்சோமுங்க நாங்க...!!


கிட்டத் தட்ட ஒன்றரை மாசமா உங்கள தொந்தரவு பண்ணாம ரொம்ப கஷ்டமா போச்சு ங்க எனக்கு... அதான் திரும்பவும் கிறுக்கலாம்னு வந்துட்டேன்...!!

போன மாசம் 22 ஆம் தேதி நான் என் கணவரோட அலுவலக நண்பரோட மனைவியோட இந்தியாவுக்கு கிளம்பினேன்ங்க... ஜெர்மனி ல இருக்கறப்ப rediff news, அந்த news இந்த news னு படிச்ச எல்லாத்துலயும்... பன்றிக் காய்ச்சல் ரொம்ப அதிகமா பரவிற்றுக்கு எல்லா எடத்துலையும்னு தான் படிச்சேன்ங்க... அதனால நானும் என்னோட கூட வந்தப் பெண்ணும் முகக் கவசம், அப்புறம் கைக்கு alcohol sanitizer gel, gloves இதெல்லாம் வாங்கிக்டு போனோம்ங்க..

விமானத்துல போயி உக்காந்த்துக்கிட்டோம் நாங்க... ஆனா, ஒருத்தர் கூட முகக் கவசம்( face mask ) போட்டுக்கலைங்க... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அதனால கொஞ்ச நேரம் நாங்களும் அதப் போட்டுக்கல... ஆனா, எங்க பக்கத்துல ( பக்கத்து row la ) உக்காந்துற்றுந்த ஒரு ஆளு இஷ்டத்துக்கு தும்பல் போட ஆரம்பிச்சிட்டாரு... அதனால, நாங்க ரெண்டு பேரும் பயந்து போயி உடனே முகத்துக்கு கவசத்த எடுத்து போட்டுக்கிட்டோம்... ஆறு மணி நேர பயணத்துக்கு அப்புறம் துபாய் விமான நிலையத்துக்கு வந்தது சேர்ந்தோம்.. அங்க தான் கூட்டம் அலை மோதுமே...! இங்க தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு பேசிக்கிட்டு நாங்க விமாத்த விட்டு இறங்கி நடந்துக்கிட்டு இருந்தோம்... எங்க ரெண்டு பேரத் தவிர வேற யாருமே கவசம் போடலீங்க...!! எங்க பக்கத்துல உக்காந்திருந்தவர் தும்மனார்னு தானங்க நாங்க mask போட்டுக்கிட்டோம்? கடைசியில என்னாச்சு தெரியுங்களா...?? அந்த ஆளு எங்கள பாத்து எதோ சொல்லிட்டு சிரிச்சிட்டு போறாரு... என்னத்த பண்றது??!!

அப்பவும் நாங்க கண்டுக்கலங்க... அப்டியே தான் நாங்க போக வேண்டிய கேட் (gate) ku போனோம்... போற வழில லாம் எல்லாரும் முக மூடி கொள்ளகாரங்கள பாக்கற விதமா பாத்தாங்க எங்கள!! எங்கள மாறி இன்னும் ரெண்டு பேர்(ரெண்டு பேர் னா எண்ணி ரெண்டு பேர் ங்க...) கவசம் போட்டுக்கிற்றுந்தாங்க! அதப் பாத்ததும் ஒரு வித திருப்தி வந்துச்சி எங்களுக்கு... சரி நமக்கு துணையா இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கங்கர நிம்மதியும் வந்துச்சி...

ஆனா... அவங்களும் வேறேதோ விமானத்துல போயிட்டாங்க போல... நாங்க போக வேண்டிய கேட்(gate) கு வரல அவங்க... :(

பெங்களூருக்கு போற விமானத்துல வந்து உக்காந்தும் ஆச்சு நாங்க... அந்த விமானத்துலையும் யாரும் முகக் கவசம் போடலைங்க... போதாக் குறைக்கு எங்கள கடத்தல் காரங்க, கொள்ளகாரங்கள பாக்கற மாறியே பாக்கறாங்க!! ஆனாலும் நாங்க கவசத்த களட்டல... நம்ம ஒடம்பு தானே ங்க நமக்கு முக்கியம்?? என்ன சொல்றீங்க?? ;)

நாலு மணி நேரத்துக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தோம்... அங்க immigration கு முன்னாடி பன்றி காய்ச்சல் இருக்கானு சோதிக்கப் போறதா சொன்னாங்க... சரி னு அங்க போனா... காய்ச்சல் இருக்கா னு temperature check (கடனே னு ) பண்ணிட்டு அனுப்பிட்டாங்க... அதுக்கப்பறம் immigration முடிஞ்சி ஒரு வழியா வெளிலயும் வந்துட்டோம்...
ஆனா, துபாய் லயாவது எங்களைத் தவிர இன்னும் ரெண்டு பேர் முகக் கவசம் போட்டுக்கிட்டு இருந்தாங்கங்க... இங்க... பெங்களூருல ஒருத்தங்க கூட போடல...

மக்கள் கிட்ட பன்றிக் காய்ச்சலைப் பத்தின விழிப்புணர்வு இல்லியா? இல்ல... பத்திரிகை ல லாம் படிச்சது லாம் பொய்யா?? (எதோ... வெளில போனாலே எல்லாரும் முகக் கவசத்தொடத் தான் போறாங்க, அப்டி இப்டி னு போட்டிருந்தாங்க..) எங்களுக்கு ஒன்னும் புரியல... மொத்தத்துல துபாய் விமான நிலையத்துலையும் சரி பெங்களூரு விமான நிலையத்துலையும் சரி... நானும் என்னோட கூட வந்த பெண்ணும் கோமாளிகளாட்டம் திரிஞ்சிக்கிற்றுந்தோம்... !!









தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!