Thursday, August 6, 2009

குளியலறையால் வந்த தலைவலி...!!


நான் பொறந்து வளந்ததெல்லாம் சென்னை ங்க...!! வாக்கப்பட்டதுக்கு அப்புறம் பெங்களூருக்கு வந்தேன்... சென்னை வெயிலைப் பத்திதான் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே?! அதனாலேயே பெங்களூர் குளிரு எனக்கு பழக கொஞ்ச நாள் ஆச்சு... அதுக்குள்ளஎங்க வீட்டுக்காரருக்கு ஜெர்மனிக்கு கிளம்பும் படி அவரோட அலுவலகத்துல உத்தரவு வரவே நானும் அவரோட போன வருஷம் நவம்பர் மாசம் ஜெர்மனிக்கு வந்தேனுங்க!! நவம்பர் மாசம் நம்ம ஊர்லையே குளிருமே?!! இங்கத்து குளிர சொல்லவா வேணும்?? எப்படியோ.... கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திக்கிட்டு அறையில இருக்கற room heater அஹ போட்டுக்கிட்டு உக்காந்துக்கிற்றுந்தேன்...




குளிர எப்படியோ சமாளிக்க கத்துக்கிட்டாச்சு.. (போகப் போக இந்த குளிர் பழகிப் போயி சென்னைக்கு வந்தப்ப வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது வேற கத!!)




நம்ம வீடுகள்லலாம் குளியலறைங்க... "நானும் இருக்கேன்ங்க உங்க வீட்டுலங்கர மாறி தான் இருக்கும் எதோ ஒரு மூலையில", ஒருத்தங்க போயி நின்னா அந்த அறையே நெரம்பிடர மாறி தான் கட்டுவோம்... இங்க வந்து பாத்தா படுக்கை அறைய விட குளியலறை தானுங்க பெருசா இருக்கு!




அட... அது இருக்கட்டும்ங்க... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் குளியலறைக்கு கதவு மட்டும் தானுங்க இருக்கும், காத்தோட்டத்துக்காக ஒரு ஓரத்துல ஒட்டன மாறி ஜாலி வெச்சிருப்பாங்க...!! ஆனா, இங்க(ஜெர்மனி ல) என்னடான்னா... ஒரு ஜன்னலே வெச்சிருக்காங்க..!! அதுவும் கண்ணாடில... நடுவுல ஒரு ஜாலியுமில்ல, க்ரில்லுமில்ல! இங்க வந்த புதுசுல எனக்கு ஒரு நிமிஷம் 'ஆத்தாடி, இங்கிட்டு நின்னு குளிக்கறது வெளிலேருந்து பாக்கலாம் போலிருக்கே..' னு நெனச்சி என் கொலையே நடுங்கிடுச்சில?! அப்பரம் பாத்தா, அந்த ஜன்னல்ல (கண்ணாடில) எதோ ஒட்டி வெச்சிருக்காங்க... sticker ஆம்! வெளில லாம் ஏதும் தெரியாதாம்... :) சரி தான்...




ஜன்னல் கத இப்டி ஆனாலும், சினிமாவுலயும்-விளம்பரத்துலையும் அழகா




'பாத் டப்' ல குளிக்கற மாறி காட்டுவானே.. அதே மாறி ஒன்னு இருந்துச்சிங்க.. ஆஹா.... அதப் பாத்த உடனே அவ்ளோ சந்தோசம் என் மனசுல...(!) யம்மாடி!! அத உபயோகிச்சப்ப்ரம் ல அத சுத்தம் பண்றது எவ்ளோ கொடுமைனு தெரிஞ்சிது?!!


அதோட ஏறக்கட்டியாச்சுப்பா அந்த தப்ப:(




சரி... குளியலரைலையே இன்னொரு பக்கமா 'cubicle'



வெச்சிருக்காங்களே... நமக்கு அது தான் சரிப்படும் னு நெனச்சி அது கிட்ட போனா அதுல என்னடான்னா நாம குளிச்சதுக்கப்ரமா அந்த கண்ணாடிகளையும் குளிர்ந்த தண்ணியில குளிப்பாட்டிட்டு தான் வரணுமாம்! இல்லன்னா பளபளன்னு இருக்கற அது உப்பு பூத்து போயி 'ஈ' னு பல்ல காட்டுது! இந்த கொடுமைய எங்க போயி சொல்றது?




அட இருங்கப்பா...!! இன்னொரு கொடுமையுமிருக்குங்க... அதையும் சொல்றேன் கேளுங்க... நம்ம குளியலறைய தெனமும் தண்ணி ஊத்தி கழுவி தள்ளி சுத்தம் பண்ணுவோம்ல? ஆனா இங்க என்னடான்னா.. ஒரு சொட்டு தண்ணி தரையில விழப்படாதாம்! அப்டி தவறி விழுந்துடுச்சின்னா உடனே அத சுத்தம் பண்ணிடனுமாம்! இல்லன்னா அது தரையில ஊறி ஊறி கீழ் வீட்டு செவுத்துல(நாங்க இருக்கறது இரெண்டாவது மாடியில) ஒழுகுமாம்..!! யப்பா சாமி... இது என்னடா கொடும??





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!