Monday, August 17, 2009

நாயும் நம்மள மாறித் தானுங்க!!


நாய் நன்றியுள்ளது ன்னு நாம சொன்னாலும், பொதுவா... மிருகங்களுக்கு யோசிக்கற திறன் கிடையாது.. அதுங்களுக்கு 5அறிவு தான், அதனால எந்த ஒரு விஷயத்தையும் யோசிச்சி அதுக்கப்புறம் செயல்படத் தெரியாதுன்னு தான் நாம நினைக்கறோம்.. நானும் அப்டித் தானுங்க நெனச்சிக்கிட்ருந்தேன்...



ஏதாச்சும் படத்துல நாய் அழகா எதையாவது யோசிச்சி செஞ்சா.. உதாரணத்துக்கு

1.ஒரு பந்த தூக்கி போட்டா அத ஓடிப் போயி எடுத்துக்கிட்டு வரும் போது...

2.தன்னை வளர்ப்பவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துச்சின்னா அந்தத் தீங்க எதிர்த்துப் போராடறது..



அதுக்கு பழக்கப் படுத்தி இருக்காங்க ன்னு தான் நான் நெனச்சிக்குவேன்...



ஆனா, நான் நெனச்சது தப்புன்னு என்னோட 'விக்கி' எனக்கு (அதோட செயல்களால)புரிய வெச்சிடுச்சிங்க... அப்டி என்ன செஞ்சிதுன்னு பாக்கறீங்களா...?? பெருசா ஒன்னும் இல்லங்க... சாதாரண தினசரி வேலைகள் தான்...



உதாரணமா இதச் சொல்றேன்ங்க...

தெனமும் அதுக்கு(எங்க விக்கி கு) சாப்பாடு கொடுத்ததுக்கு அப்புறம் எங்க அம்மா குளிர்சாதனப் பெட்டி லேருந்து குடி தண்ணீர எடுத்து அதோட கிண்ணத்துல ஊத்தி வெப்பாங்க... அதுவும் சமத்தா அத குடிச்சிட்டு போயி படுத்துக்கும்!



ஒரு நாள், எங்க அம்மா அதுக்கு சாப்பாடு மட்டும் போட்டுட்டு... மறதில தண்ணிய குடுக்காம விட்டுட்டாங்க... அது கொஞ்ச நேரம் எங்க அம்மாவையே சுத்தி சுத்தி வந்துச்சி.. அப்பவும் எங்க அம்மாவுக்கு புரியல! அவங்களோட வேலைஎல்லாத்தையும் முடிச்சிட்டு போயி உக்காந்துட்டாங்க... எங்க விக்கி என்ன பண்ணுச்சி தெரியுமா ங்க? அம்மா வோட புடைவை அதோட வாயால பிடிச்சி இழுத்துக்கிட்டு சாப்பிடும் அறைக்கு(dining hall) போயி, குளிர்சாதனப் பெட்டி கிட்ட போயி நின்னு எங்க அம்மாவ பாத்துச்சி... அப்பவும் அது என்ன சொல்லுதுன்னு புரியாம 'என்ன டா? என்ன வேணும் உனக்கு?னு கேட்ருக்காங்க அம்மா... அது குளிர் சாதனப் பெட்டிய ஒரு முறை பாக்குது, அப்புறம் போயி அதோட சாப்பாடு தட்டையும் கிண்ணத்தையும் வெச்சிருக்ற அலமாரிய காட்டுது... திரும்ப வந்து குளிர்சாதனப் பெட்டிய காட்டுது...' அத பாத்துட்டு நான் அம்மா அது தண்ணி கேக்குதோ என்னமோ னு சொல்லி கொஞ்சம் தண்ணிய(குளிர்சாதனப் பெட்டி லேருந்து எடுத்து) ஊத்திக் குடுக்க அது அந்தத் தண்ணிய குடிச்சிட்டு போயி படுத்துக்கிச்சி!!



இன்னொரு உதாரணம் ங்க...



எங்க அப்பா தான் அத 'சூச்சு' போக வெளில கூட்டிக்கிட்டுப் போவாரு... ஆனா, மழை வந்துற்றுந்ததனால ஒரு நாள் ரொம்ப நேரம் ஆகியும் அப்பா அத வெளில கூட்டிட்டு போகல!! (எங்க விக்கி ரொம்ப சமத்துங்க... அவன் குட்டியா இருக்கும் போது ஒரு முறை தான் வீட்ல 'சூச்சூ' போயிட்டான், அப்போவே அவன அம்மா திருத்திட்டாங்க... அவன் சுச்சு போன எடத்த காட்டி வெளில தான் போகணும் னு சொன்னாங்க... அன்னிலேருந்து அவன் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்குள்ள அப்டி போக மாட்டான்!!) வெளில னு சொன்னதும் நம்ம நண்பர் 'ராஜ்' அதாங்க... நம்ம 'குறை ஒன்றும் இல்லை ராஜ்' கௌண்டற கூட்டிக்கிட்டு 'தெருவ நாசம் பண்ணா மட்டும் பரவா இல்லியா ன்னு' வந்திடப் போறாரு...



கொஞ்சம் பொறுமையா மேல படியுங்க ராஜ்... நான் வெளில னு சொன்னது எங்க வீட்டுக்கு வெளில தான், சாலைல இல்ல... எங்க தோட்டத்துல ஒரு எடத்த ஒதுக்கிட்டோம் அவனுக்காக!! :)



சரி நானு என்ன சொல்ல வரேன் னு சொல்லிடறேனே... மழை வந்ததால ரொம்ப நேரமா விக்கி ய அப்பா வெளில கூட்டிட்டு போகல! மழை வருதுங்கறதால அதுவும் பேசாம இருந்துச்சி... ஆனா, மழை நின்னுப் போன அப்புறம் அப்பா எதோ வேலையா விக்கி ய வெளில கூட்டிட்டு போகாம விட்டத மறந்துட்டாரு போல.. அது... அப்பாவா நம்மள கூட்டிட்டு போவாங்க னு பாத்து பாத்து இது ஆவறதில்ல னு நெனச்சிதோ என்னவோ... நேரா போயி அப்பாவோட ஆடைய பிடிச்சி இழுத்துது... அப்பாவுக்கு ஒன்னும் புரியாம 'என்ன டா?னு கேட்டு அது பின்னாடியே நடந்து போனாருங்க... அது, வாசல் வர போயி நின்னுக்கிட்டு, அப்பாவ ஒரு முறை பாக்குது, வாசல் கதவ ஒரு முறை பாக்குது...'





அப்பவும் அப்பாவுக்கு புரியல!! போடா னு சொல்லிட்டு ஹால் ல வந்து உக்காந்துக்கிட்டாறு... அது திரும்பவும் வது அப்பாவ ஒரு முறை பாத்துட்டு, வாசல் கதவ காட்டுச்சி... அப்பவும் என்னன்னு புரியாம அப்பா அத பாக்கவே... நேரா போயி வாசல் கிட்ட நின்னுக்கிட்டு அதோட கால தூக்கி அது சூச்சு போற பாணியில ஒரு முறை நின்னு காட்டிட்டு கால எறக்கிட்டு திரும்பவும் அப்பாவ பாத்துட்டு வாசல் கதவ காட்டுச்சி!!



இத்தனிக்கும், நாங்க எங்க விக்கி ய பழக்கப்படுத்தல் ங்க... அதாங்க... training குடுக்கல... ஆனாலும் எவ்ளோ யோசிக்குது பாருங்க அது?! இந்த ரெண்டு உதாரணம் தான் இருக்கு னு நெனைக்காதீங்க... நான் எங்க விக்கி ய பத்தி சொல்ல ஆரம்பிச்சேன் நா ஒரு நாள் இல்ல எத்தன நாள் ஆனாலும் சொல்லிக்கிட்டே இருக்கலாம்... ஆனா, 'நீங்க ல்லாம் பாவம்'ல... அதான் இதோட நிறுத்திக்கறேன்(இப்போதைக்கு.. ஹி ஹி ;))!!




தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!