Thursday, August 13, 2009

கதை கதையாம் காரணமாம்!!


"எல்லா வேலையும் நானே தான் பாக்கணும், இதென்ன வீடா இல்ல சத்திரமா? எல்லா வேலையையும் நான் மட்டும் செய்ய முடியாம இங்க கெடந்து தவிக்கறேன், போதாதுன்னு என்ன வேல வாங்கிக்கிட்டு, சொகுசா உக்காந்த்துக்கிட்டு பதம் பாக்கறீங்க?!" சந்தடி சாக்கில் உக்கார்ந்த இடத்திலிரிந்து அதிகாரம் செலுத்தும் தன் மாமியாரை சாடினாள் லக்ஷ்மி!










லக்ஷ்மிக்கு அன்பான கணவன், 2 குழந்தைகள்- ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை.. ஆண் பிள்ளை மூத்தவன்... படு சுட்டி... இளையவள் அமைதியின் உருவம்.. கணவன்(சந்திரன்) அன்பானவன், ஆனால், ஊருக்காக பயப்படுபவன்... சொந்த பந்தங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் இயல்புடையவன்! இவர்கள் சென்னையில் வசிப்பதால் ஊரிலிருந்து எந்த விசேஷத்துக்கு எவர் வந்தாலும் இவர்கள் வீட்டில் தான் ஐக்கியமாவார்கள்!




வந்தவர்கள் எதிரில் தன் மருமகள் லக்ஷ்மியை மேலும் கடிந்து விழுவாள் மாமியார் காரி... "இதென்னடி? சாம்பார்ல இவ்ளோ கடுக போட்டிருக்க? உங்கப்பன் வீட்டு சொத்தா? என் பய்யன் கஷ்டப்பட்டு, இராத்திரியும், பகலுமா உழச்சி சம்பாதிக்கறான்.. நீ என்னடான்னா இப்டி வீணா செலவு பண்ற..." வந்தவங்களுக்கு உக்காந்த இடத்துல உபசரிப்பு வேறு! காபி குடுத்தா அத குடிச்சிட்டு அந்த டபராவ கூட எடுத்துட்டு போயி சமயக் கட்டுல போட மாட்டாங்க! அவங்க போடலாம்னு எந்திரிச்சாலும் இந்த மாமியாக் காரி விடமாட்டா.. அங்கிட்டு வெச்சிடுங்க.. எல்லாம், அவ எடுத்துக்டு போவா ம்பா...




சமயலரையிலேருந்து லக்ஷ்மி தனக்குத் தானே முனுமுனுத்துக்குவா... "ஆமா ஆமா... அதான், சம்பளமில்லாத வேலைக்காரி நானொருத்தி இருக்கேனே இந்த வீட்ல! யாரும் சமயக் கட்டுப் பக்கம் வராதீங்க"... எத்தன வேல னு தான் அவ தனியா செய்வா பாவம்? காலைல எந்திரிச்சது லேருந்து வாசல் தெளிச்சி கோலம் போட்டு, சமையல் செஞ்சிட்டு, வீடு பெருக்கி தொடச்சிட்டு, துணி துவச்சி காய போட்டு, சாமான் கழுவி போட்டு... ஹப்பாடா னு உக்காந்தா, அப்போ தான் ஏதாவது வேல சொல்லுவா மாமியா காரி!




இது போதாதுன்னு, நாத்தனாரோட பொண்ணு மேல்படிப்பு படிக்கறதுக்கு இங்கயே வந்து டேரா போட்டுட்டா! ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல... அஞ்சு வருஷம் இங்கயே தங்கிட்டா!! சரி சின்ன பொண்ணு தான னு அவளுக்கும் தன் பிள்ளைகளுக்கு செய்யற மாறித் தான் செஞ்சா லக்ஷ்மியும்... ஆனா, அந்த பொண்ணு செய்யரதை எல்லாம் செஞ்சிக்கிட்டு, அவ பாட்டியோட கூட்டு சேந்துக்கிட்டு லக்ஷ்மிய கண்டபடி பேச ஆரம்பிச்சிட்டா...


ஒரு நாள், அவளோட(லக்ஷ்மியின் நாத்தனார் மகள்) புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டுத் தரச் சொல்லி அவளோட மாமாவ(சந்திரன) நச்சரிக்கவே, அவரும், போட்டுத் தரேன் னு, புத்தகம் எல்லாத்தையும் வாங்கி வெச்சிக்கிட்டு, அட்டைகள போட ஆரம்பிச்சாரு! அட்ட போடற மும்மரத்துல... ப்ளேட பக்கத்துல தரைல வெச்சிட்டாரு...



தன் அப்பா அந்த ப்ளேடை வெச்சி அட்டைய கிழிக்கரத பாத்துக்கிட்டே அவரோட மூத்த மகன்(ஒரு இரெண்டு வயசு இருக்கும் ங்க) திடீர்னு பக்கத்துல வந்து அத எடுத்து பாத்திருக்கான்,... அட்டைய குடுக்க சொல்லி கேட்டிருக்கான்.. ஆனா, அந்த பொண்ணு அட்டைய எல்லாம் எடுத்து இன்னொரு பக்கமா வெச்சிட்டு தர முடியாதுன்னு சொல்லி இருக்கா... இந்த (வாலு) கொழந்த உடனே ப்ளேட வெச்சி அவனோட கைய அருத்துகிற்றுக்கான்!! ரத்தம் ஆறா ஓடவே வலில அழ ஆரம்பிச்சிட்டான், அத பாத்துட்டு அவனோட அம்மாவும் அப்பாவும் பதறி அடிச்சிக்கிட்டு போயி மருத்துவ மனைக்கு கொழந்தைய தூக்கிக்கிட்டு ஓடி, கொழந்த திரும்பவும் சிரிக்கரதுக்குள்ள ஒரு வழியா ஆயிட்டாங்க ரெண்டு பேரும்!!




எதோ... காயம் அவங்க அம்மா அப்பாவுக்கு பட்ட மாறி அவங்க தான் ஓய்வெடுத்தாங்க வீட்டுக்கு வந்து! அந்தச் சுட்டிப் பய தாவி குதிச்சி விளையாட போயிட்டான்!!








இந்தக் குட்டிக் கண்ணன் பிறந்தது கிருஷ்ணாஷ்டமி அன்னிக்கி தான்.. குட்டிக் கண்ணன் தான் அவங்களுக்கு பொறந்திருக்கான் னு அவனுக்கு அவங்க அப்பா 'கோகுலகிருஷ்ணன்' னு பேர் வெச்சாரு! பேர் வெச்சது நாலயா, இல்ல அந்த நாள்ல பொறந்தது நாலயானு தெரியல... அந்தப் பேருக்குரிய வேலைகளைத் தான் அந்தப் பய்யன் செய்ய ஆரம்பிச்சான்!!




................. தொடரும்!! ;)





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!