Wednesday, August 12, 2009

என்னத்தங்க தலைப்பு வெக்கறது இதுக்கு?


இந்த இடுகையை "குட் பிளாக்ஸ்" பகுதியில் வெளியிட்ட இளமை விகடனுக்கு என் நன்றிகள்...!!



இன்னும் இரெண்டு நாள் தான் இருக்கு சுதந்திர தினத்துக்கு! ஆமாம், நமக்கு ஆங்கிலேயர்கள் கிட்டேருந்து சுதந்திரம் கெடச்சி வருஷக் கணக்குல ஆயிடுச்சி தான்... ஆனா, சுதந்திரம் கெடச்சும் நாம யாரும் அத சரிவர உபயோகிக்க தெரியாம, திரும்பவும் அவனுங்க கிட்ட தான் அடிமையா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்! நம்ம நாட்ட விட்டுட்டு வெளி நாட்டுக்கு வந்து நெறைய சம்பாதிக்கரோமுங்கர பேர்ல, அவங்களுக்கு ஒழச்சி கொட்டி மத்தவன் நாட்டுக்கு சேவை செய்யறோம்... காசுக்காக அண்டை நாட்டுக் காரனுக்கு ஒழச்சி, அவன் நாட்ட முன்னேத்தரதுக்குப் பேர் அடிமைத் தனம் தானே?

கொஞ்ச நாளா யாரப் பாத்தாலும் இது 'recession time' .... 'வேல போயிடுச்சி', 'அலுவலகத்துல வேல கம்மி ஆயிடுச்சி ' இப்டித் தான் சொல்லிக்கிட்டு திரியறாங்க... இதுல ஒரு விஷயத்த நாம யோசிக்கனும்ங்க... நாம நம்ம நாட்ட விட்டுட்டு மத்தவன் கிட்ட கை ஏந்திக்கிற்றுக்கோம்... இது ஒரு வகையில பிச்ச எடுக்கறது தான் ங்க... :( இன்னும் சொல்லப் போனா அத விட கேவலம்!

(யார் மனசையும்(வெளி நாட்ல வசிக்கரவங்களையும், அங்க வேல செய்யறவங்களையும்)புண்படுத்தணும்னு நான் இதச் சொல்லல.. ஆனா, வெளி நாட்ல வாழ்ந்துக்கிட்டு நம்ம நாட்டுக்காக ஏதும் செய்ய முடியாத சூழ்நிலையில்(தனிப்பட்ட காரணங்களால்) வாழும் இந்தியர்களில் ஒருவளான என்னுடைய ஆதங்கம் தான் இது)

அமெரிக்க குடியரசுத் தலைவர் 'ஒபாமா' ஒரு பேட்டில(meeting ல) அவங்க நாட்ட முன்னேத்தரதுக்கான வழிகள பத்தி பேசும் போது... "தம் நாட்டிலும்(அமெரிக்கா வில்) இந்தியா மற்றும் சீனா விற்கு இணையான கல்வியை வழங்க அதற்கு தகுந்த கல்விக் குழுவை (educational trusts) அமைக்கப் போவதாகச் சொன்னார்".

எல்லா வகையிலையும் சிறந்து விளங்கர அமெரிக்க நாடே நம் நாட்டோடக் கல்வியையும், இளைஞர்களையும் அவங்களோட திறமையையும் பாத்து வியப்படையுது... ஆனா நாம ஜாதி மத வெறி பிடிச்சு அலையறோம்! அது போதாதுன்னு மொழி வெறி வேற! இப்டி லாம் யோசிக்காம கொஞ்சம் சமயோசித உணர்வு இருக்கறவங்களும்...

"நம்ம நாட்டுக்காக ஒழச்சி நம்ம நாட்ட முன்னேத்தணும்னு நாம நெனச்சாலும் இந்த படுபாவி அரசியல்வாதிங்க விட மாட்டானுங்க ' "னு சுலபமா(!) சொல்லிட்டு நம்ம பொழைக்கற வழிய பாப்போம் னு வெளி நாட்டுக்கு போயிடறாங்க...

வேற்றுமையில் ஒற்றுமை னு நாம ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு திரியறோம்! ஆனா, நடக்கறத பாத்தா வயத்தெரிச்சல் தான் மிஞ்சுது.. இலங்கை ல நம்ம தமிழர்கள தாக்கராங்கனும் போது நம்மளால ஆதங்கப் படறத தவிர வேற என்னங்க செய்ய முடிஞ்சிது? பதவி ல இருக்கறவங்க அவங்கவங்க பதவிய தக்க வெச்சிக்க கடைசி நிமிஷத்துல உண்ணா விரதம் அது இது னு சொன்னாங்களே தவிர வேற என்ன செஞ்சாங்க? சரி நம்ம மத்திய அரசு தக்க சமயத்துல ஒரு குரல் கொடுத்திருக்கலாம்ல? அத செஞ்சாங்களா? அவங்களுக்கு தமிழர்கள்னா அவ்ளோ இளக்காரமா? இல்ல, இதே அவங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) ஏற்பட்டிருந்தா சும்மா விட்டிருப்பாங்களா?

நேத்திக்கி, ஒரு பதிவு படிச்சேன்ங்க நானு... அதுல, நம்ம இந்தியாவ 20 அல்லது 30 நாடுகளா பிரிச்சா தான் ஆசியாவ மேம்படுத்த முடியும்னு சீனா சொல்லுதாம்! இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? வேற்றுமையில் ஒற்றுமை னு நாம சொல்றது அவங்களுக்கு 'atrocious' அஹ படுதாம்! இந்தியாவ பல நாடுகளா(ஐரோப்பா நாடுகள் மாறி) பிரிச்சாத் தான் தெற்கு ஆசியாவை மேம்படுத்த முடியுமாம்(?)! ஜாதிகளையும் பிரிவுகளையும் அப்போ தான் ஒழிக்க முடியுமாம்! இதுக்கு, பாகிஸ்தான், புடான், நேபால் போன்ற தோழமை(!) நாடுகளோட ஒத்துழைப்ப பெறப்போகுதாம் சீனா! இல்ல... தெரியாம தான் கேக்கறேன்.. அதென்ன ங்க நம்மள பிரிக்கறதுல அவனுங்களுக்கு அவ்ளோ ஆர்வம்? அது சரி... நமக்கு நாமலே அடிச்சிக்கிட்டு இருந்தா மத்தவனுங்க மூக்க நொழைக்காமலா இருப்பானுங்க?! இது... "இரெண்டு பூனை சாப்பாட்ட பிரிச்சி சாப்ட அடிச்சிக்கும் போது ஒரு கொரங்கு வந்து எல்லாத்தையும் அது தின்னுட்டு போன கதையாத் தான் முடியப் போவுது..."




தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!