Tuesday, August 11, 2009

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!


அப்போ எனக்கு என்ன வயசிருந்திருக்கும்னு கூட எனக்கு நினைவில்ல! ஆனா நான் சின்ன புள்ளயா இருந்தப்ப தான் இந்த சம்பவம் நடந்துச்சி... எங்க அம்மாவும் அப்பாவும் வெளில எங்கயோ போக கிளம்பிக்கிற்றுந்தாங்க... என் பாட்டி(அப்பாவோட அம்மா) எங்க அத்த வீட்டுக்கு போயிருந்தாங்க, ஆனா எங்க பாட்டியோட அம்மா எங்க கூட இருந்தாங்க... அவங்க இருக்காங்கங்கர தைரியத்துல என்னையும், அண்ணாவையும் வீட்லயே விட்டுட்டு அம்மாவும் அப்பாவும் வெளில கிளம்பி போயிட்டாங்க(எங்க போனாங்கன்னு கூட எனக்கு சரியா நினைவில்ல)!...

பெரிய ஆயா(பாட்டி யோட அம்மாவ நாங்க அப்டித் தான் கூப்டுவோம்!) தொலைக்காட்சிப் பெட்டில எதோ பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான், என் அண்ணா அப்பரம் என் வீதியில் வசிக்கும் என் தோழி மூவரும் விளையாடிக் கொண்டிருந்தோம்... கொஞ்ச நேரத்துல எங்க பெரிய ஆயா வந்து என் அண்ணாவ கூப்டாங்க..

" 'கோகு' ( என் அண்ணா பேர் கோகுலகிருஷ்ணன்) இங்க வாடா கண்ணா... யாரோ ஒருத்தர் வந்திருக்கார் பாரு.. உங்க அப்பா தான் அனுப்பினாராம்... வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறதுக்காக பட்டி வாங்கிக்கிட்டு வரச்சொன்னாராம், நம்ம 'பித்தள அண்டா'வ எடுத்துக்கிட்டு போயி வாங்கிக்டு வந்து வீட்ல வெக்க சொன்னாராம் அப்பா வரதுக்குள்ள..." னு எங்க பெரிய ஆயா சொல்ல நானும் அண்ணாவும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு நின்னோம்... அப்பரம் அண்ணா- வந்திருக்கிற ஆள் கிட்ட "எங்க அப்பா எங்க கிட்ட ஏதும் சொல்லலியே! எப்போ சொன்னாங்க உங்க கிட்ட?"னு கேட்டான்...

அதுக்கு அந்த ஆளு இதோ இப்போ தான் வழில பாத்தேன் அப்பாவ.. உன்னையும் கூட்டிட்டு போகச்சொன்னாரு.. னு சொன்னார்.. அதோட, வாப்பா போகலாம் னு சொல்லிட்டு எங்க வீட்டு குளியலறையில இருந்த பித்தள அண்டாவ (நல்லா பெரிய, கனமான அண்டா ங்க அது, நல்ல வெல போகும்) எடுத்துக்கிட்டு போயி அவர் வந்த மிதிவண்டில உக்காந்துக் கிட்டு அண்ணாவ தூக்கி முன்னாடி உக்கார வெச்சிக்கிட்டு இதோ வந்துடறோம் னு சொல்லிட்டு போனார்...

ஐயோ... அண்ணாவ வேற கூட்டிட்டு போயிட்டாரே இந்த ஆளு... நாம எப்டி விளையாடறதுன்னு நானும் என் தோழியும் புலம்பிக்கிட்டே உள்ள போயி நாங்க மட்டும் விளையாட ஆரம்பிச்சோம்.. ஆனா... அண்ணாவும் அந்த ஆளும் போயி ரொம்ப நேரம் ஆச்சு, ரெண்டு பேரும் திரும்பி வரவே இல்ல.. எனக்கென்னமோ பயமா இருந்துச்சி... என் தோழி கிட்ட அதப் பத்தி சொல்ல.. அவளும் என்ன di செய்கிறது, சரி வா.. வெளில போயி பாக்கலாம்னு சொன்னா.. நாங்க ரெண்டு பெரும் வெளில வாசல் கிட்ட போயி நின்னுக்கிட்டு போற வரவங்களலாம் பாத்துக் கிற்றுந்தோம்... ஆனா அண்ணா வரல... :(

எனக்கு ஒன்னும் புரியல, என்ன பண்றதுன்னும் தெரியல! பெரிய ஆயா கிட்ட போயி இதப் பத்தி கேக்கலாம்னு பாத்தா "அவங்க பயத்துல அழவே ஆரம்பிச்சிட்டாங்க... ஐயோ, புள்ளைய தனியா அனுப்பிட்டனே நானு! இப்போ உங்க அப்பா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்னு தெரியலியே னு பாடறாங்க!"

ரெண்டு மணி நேரம் கழிச்சி, அண்ணா மட்டும் வந்தான்... 'அண்ணா' னு ஓடிப் போயி வந்துட்டியா? எங்க போயிட்ட நீ? பயந்தே போயிட்டோம் தெரியுமா னு நான் அழ ஆரம்பிக்க... அண்ணா சொன்னான்...

"இல்ல டா குட்டி... பிள்ளையார் கோவில் வர தான் டா போனோம்... அங்க போனதும் அந்த ஆளு என்ன கீழ எறக்கி விட்டுட்டு, நீ இங்கயே இருப்பா.. நான் மட்டும் போயி சுண்ணாம்பு பட்டி வாங்கிக்கிட்டு வந்துடறேன் னு சொல்லிட்டு போயிட்டாரு... போனவர் வரவே இல்ல.. நான் பாத்துப் பாத்து வீட்டுக்கு வந்துட்டேன்"

அப்பாவும், அம்மாவும் வெளில போறதையும் வீட்ல சின்ன புள்ளைங்களும், ஒரு வயசான பாட்டியும் தான் இருக்காங்க ங்கறதையும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு தான் அந்த ஆளு எங்க வீட்டுக்கு வந்து தெரிஞ்சவன மாறி ஆயா கிட்ட எங்க அப்பா பேர சொல்லி எங்கள ஏமாத்திட்டு அண்டாவ திருடிக்கிட்டு போயிற்றுக்கான்...

ஆத்தாடி...!! எப்டிலாம் திருடரானுங்க டா சாமி...!!

இதெல்லாம் நடந்து முடியரதுக்கும், அம்மா அப்பா வீட்டுக்கு வரதுக்கும் சரியா இருந்துச்சி... அப்பா கிட்ட நடந்தத சொன்னதும் பயந்து போயிட்டாங்க பாவம்.. ஆனா 'அண்ணாவுக்கு நல்லா திட்டும் விழுந்துச்சி'... யாராச்சும் வந்து என் பேர சொன்னா உடனே போயிடுவியா? யார் என்னனு விசாரிக்கரதில்லியா? இப்டிலாம் கேட்டு திட்டினாங்க... எனக்கு அப்பா மேல கோவம் தான் வந்துச்சி அப்போ... அண்ணாவ போக சொன்னது பெரிய ஆயா தான? அப்போ அவங்கள தான திட்டனும், பாவம் அண்ணாவ மட்டும் திட்டறாங்க இந்த அப்பானு நெனச்சிக்கிட்டேன்... (இப்போ தான புரியுது அவங்கள திட்ட முடியாம தான் அண்ணாவ திட்டி இருப்பாங்க அப்பானு!)

எது எப்டியோங்க... அண்டா போனது போயிட்டு போகுது... அந்த அண்டா இல்லன்னா வேற வாங்க முடியும் காசிருந்தா! அந்த அண்டாவ திருடிக்கிட்டு போனவன் எங்க அண்ணாவையும் கூட கூட்டிட்டு போயி யார்டயாவது வித்துற்றுந்தா... என்ன ஆகறது?? அய்யய்யோ... யோசிக்கரதுக்கே பயமாவுல இருக்கு... :(






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!