Friday, August 7, 2009

அட! இப்டியும் சமாளிக்கலாமா இவங்கள?


நாம ஏதாவது ஒரு முக்கியமான வேலைய செஞ்சிகிற்றுப்போம்ங்க... அந்த நேரம் பாத்து தான் நம்மளோட தொலைப்பேசியோ(தொல்லைப்பேசியோ) இல்லன்னா நம்ம செல்பேசியோ அழைப்பு மணி விடுக்கும்! யாரோ தெரியலியே... ஏதாவது முக்கியமான அழைப்பா இருக்கப் போகுதுன்னு நாமளும் செய்யற வேலையக் கூட விட்டுட்டு அரக்க பறக்க ஓடிப் போயி அத எடுத்துப் பேசுவோம்!

அந்தப் பக்கத்துலேருந்து ஒரு பொம்பள புள்ள இனிக்க இனிக்க பேசும்...
"சார்/மேடம் நாங்க '....' வங்கிலேருந்து பேசறோம், வாழ்த்துக்கள்! எங்களோட சுயக் கடன் (personal loan) வழங்கும் திட்டத்துல கடன் பெற நீங்க தகுதியானவர்... உங்களுக்கு நாங்க '....' லட்சம் கடனா கொடுக்கறோம்... வாங்கிக்கங்க! மத்த வங்கிகள விட எங்க வங்கியில வட்டி ரொம்ப கம்மி தான்... யோசிக்காதீங்க," அது இதுன்னு பேசிக்கிட்டே போவாங்க!!




நாம வேணாம்னு சொன்னாலும் விடாம நச்சரிப்பாங்க... (அதென்னமோ... நம்மள கடன்காரனுங்களா ஆக்குறதுக்குன்னே ஒரு கும்பல் இத மாறி அலையறாங்க... என்ன பண்றது?) அட... வேணாம்மா! வேணும்னா நானே சொல்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டோம்னு வையுங்க... அவ்ளோ தான், நாம தொலைஞ்சோம்... உடனே...
"சார்/மேடம் உங்க முகவரிய சொல்லுங்க நாங்க எங்களோட ஊழியர அனுப்பி வெக்கறோம்... அவர் உங்களுக்கு எங்க திட்டத்தைப் பத்தி விளக்கமா சொல்லுவார்!" னு சொல்லுவாங்க!

என்ன திட்டம்ங்க இவங்களுது?? வாங்கற சம்பளம் கம்மியா இருந்தாலும் இருக்கறத வெச்சிக்கிட்டு நிம்மதியா வாழுரவங்கள ஆச காட்டி கடன் வாங்க வெச்சி அப்புறம் அதுக்கு வட்டிய வேற போட்டு... (ஒரு கால கட்டத்துல அவங்க வாங்கன கடன விட அதுக்கு கட்ட வேண்டிய வட்டிய பெருசா பூதம் மாதிரி வளத்தி விட்டுட்டு ) மாச சம்பளத்த மொத்தமா வட்டிக்கே குடுக்கற நெலமைக்கு கொண்டு வர்றதா?

சமீபத்துல எங்க அம்மாவுக்கும் இத மாறி அழைப்புங்க நெறைய வந்திருக்கு! அவங்களும் கொஞ்ச நாள் 'வேணாம்ங்க, வேணாம்மா' இப்டிலாம் சொல்லி பாத்திருக்காங்க... ஆனா இந்த ப்ரெச்சனை ஒயர மாறி தெரியல... ஒரு நாள் காலைல எங்க அப்பா அலுவலகத்துக்கு கிளம்பறதுக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கும் போது எங்க அம்மா அப்பாவுக்கு மத்தியான சாப்பாடு கட்றதுக்கு எதோ அவசர அவசரமா சமச்சிக்கிற்றுந்திருக்காங்க... அந்த நேரம் பாத்து அவங்களோட செல்பேசி அழைப்பு வரவே இவங்களும் போயி எடுத்துப் பேசி இருக்காங்க... (எங்க அண்ணா வோட அழைப்புக் காக காத்துக் கிட்டிருந்திருக்காங்க பாவம்!)

அந்த நேரம் பாத்து யாரோ ஒரு பொண்ணு நான் முன்னாடி சொன்ன மாறியே 'சுய கடன்' தரோம் வாங்கிக்கோங்க னு சொல்லி இருக்காங்க... அத கெட்ட அம்மாவுக்கு எரிச்சல் வரவே...

"சரிம்மா தாங்க வாங்கிக்கறேன் ஆனா திருப்பி லாம் கேக்காதீங்க, நான் கட்ட மாட்டேன் னு சொல்லி இருக்காங்க!!"

அந்த பொண்ணு உடனே...
"என்ன மேடம்? ஏன் அப்டி சொல்றீங்க?னு கேட்க..."

எங்க அம்மா...
"ஆமாம்மா, நான் கடன் வேணாம் னு சொன்னா நீ கேக்க மாட்டேங்கற, நான் வேலைக்கு லாம் போகல, வீட்ல தான் இருக்கேன், என் கிட்ட எது காசு? நான் எப்டி உனக்கு திருப்பி கற்றது? எதோ நீ ஆசப்படுறியே னு தான் நீ தர்ற பணத்த வாங்கிக்கறேன்னு சொல்றேன் னு சொல்லி இருக்காங்க!!"

கடுப்பான அந்தப் பொண்ணு உடனே செல்பேசி இணைப்ப துண்டிச்சிட்ட்ருக்காங்க!:) அப்புறமா அழைப்பு ஏதும் வரலியாம் அம்மாவுக்கு...

அட... இப்டியும் ஒரு வழி இருக்கா இவங்கள சமாளிக்க னு நான் நெனச்சிக்கிட்டேன்?! :) ஆனா, அந்த பொண்ண நெனச்சாத் தான் ஐயோ பாவம்னு இருந்துச்சி!!





தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!