Thursday, August 6, 2009

கோஸ் புலாவ்


தேவையானவை:
பட்டை- 1/2 இன்ச்அளவு
லவங்கம்-3
எண்ணெய்- 5 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கோஸ்- 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய் - 2
பட்டாணி- 1/4 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு
தேங்காய் பால்-1 கப்
பாசுமதி அரிசி- 2 கப்
தண்ணீர்- 3 கப்

செய்முறை:
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை,லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பிலை சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • கோசை பொடியாக நறுக்கிக் கொண்டு, வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் பட்டாணியையும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.
  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குக்கரில் வைத்து, அத்துடன் வாணலியில் வதக்கியவற்றை சேர்த்து, 1 கப் தேங்காய்ப் பாலும் 3 கப் தண்ணீரும் சேர்த்துக் கிளறி விட்டு குக்கரை மூடி விடவும்.
  • ஒரு விசில் வரும் வரை வைத்து, இறக்கிய பின் அத்துடன் கொத்துமல்லித் தழைகளை சேர்த்து லேசாகக் கிளறி விடவும்.
  • இதற்கு, தக்காளி தயிர் பச்சடி அருமையாக இருக்கும்!

( இது என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த புலாவ். செய்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்!)

குறிப்பு:

தேங்காய்ப் பால் செய்முறை-

  1. சிறு துண்டங்களாக நறுக்கிய தேங்காயை மிக்சியில் துருவிக் கொண்டு, பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
  2. அரைத்த விழுதைக் கையில் பிழிந்து சாறு எடுக்கவும் , இதனை முதல் தேங்காய்ப் பால் என்பார்கள்.
  3. இன்னொரு முறை, பிழிந்து எடுத்த திப்பியுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் இரண்டாம் தேங்காய்ப் பால் கிடைக்கும்,






தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!