Sunday, August 2, 2009

வி.ஜி.பி பயணம்...!!


எனக்கு ஒரு 8வயசு இருக்கும்ங்க... வி.ஜி.பி கோல்டன் பீச் க்கு போகனும்ங்கறது அப்போலாம் பெரும்பாடு!! சரியான பேருந்து வசதி கிடையாது.. பேருந்து இருந்தாலும் அதுல ஏறி எடத்த பிடிக்கரதுக்குல போதும்டா சாமின்னு ஆயிடும்...!! அன்று காந்தி ஜெயந்தி வேறு... சொல்லவே வேணாமே நம்ம ஊரு பேருந்துல ஏறுற கூட்டத்த பத்தி?! அந்த கூட்டத்த இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாமுன்னு நாங்களும் கிளம்பினோம் வி.ஜி.பி. க்கு...

காலைல 6மணிக்கு என்ன எழுப்பினாங்க அம்மா... அவ்ளோ காலைலேகுளிச்சி கிளம்பி அழகு தேவதை மாறி இருந்தாங்க எங்க அம்மா... போயி குளிச்சிட்டு வா... வி.ஜி.பி. க்கு போரோம்னாங்க... எனக்கு ஒரே சந்தோஷம்... துள்ளி குதித்து வெளில வந்து பாத்தா அப்பாவும் கிளம்பிற்றுந்தாங்க... நானும் குளிச்சி கிளம்பிட்டேன்.. அப்புறம் போயி அண்ணாவ எழுப்பினேன், அவனும் கிளம்பி வந்துட்டான் சீக்ரமா... பாட்டிக்கு கால் வலிங்கரதனால அவங்க வரல.. ஆக, நாங்க 4பேரும் கிளம்பி பேருந்து நிலையத்துல வந்து நின்னப்ப காலை ஒரு 7மணி இருக்கும்ங்க...

இன்னிக்கி பூரா விளையாடப் போரோம்ங்கரத நெனச்சி நெனச்சி என் மனசுக்குள்ள உற்சாகம், பூரிப்பு எல்லாம் கலந்து ரெக்க கட்டி பரந்துற்றுந்துச்சி.. நாங்களும் நின்னோம் நின்னோம் நின்னுக்கிட்டே இருக்கோம்.. 7.30 ஆகுது 8ஆகுது இன்னும் எங்க வந்து நின்னோமோ அங்கேயே நின்னுக்ற்றுக்கோம்... எந்த பேருந்துல ஏறினா வி.ஜி.பி. க்கு போகமுடியும்னு எனக்கு தெரியாததனால நானு ஒவ்வொரு பேருந்து வந்து நிற்கும் போதும் எங்க அப்பாவியும் பேருந்தையும் மாத்தி மாத்தி பாத்துக்ற்றுந்தேன்... ஒவ்வொரு பேருந்தாக வந்து நிற்கும்... நிறைய பேர் அதுல ஏறுவாங்க... கொஞ்ச நேரம் ஆகும்.. ஓட்டுனர் வந்து பேருந்த நகர்த்திட்டு போவார்... பாத்து பாத்து எனக்கு பொறுமையே போயிடுச்சி... அப்பாவ கேக்கவே கேட்டுட்டேன்.. "அப்பா நாம போக வேண்டிய பேருந்து வருமா வராதான்னு! "

அவர் ஒரு பேருந்த காட்டி இதோ போகுது பாருடா செல்லம்... இந்த பேருந்துல போயிருக்கலாம் நாமன்னு ரொம்ப சர்வ சாதாரணமா சொல்றாரு! என்னப்பா? பின்ன ஏன் நாம அதுல ஏறல னு நான் கேட்க... அவர் சொன்னார்.. "இல்ல மா அதுல ஒரே கூட்டமா இருந்துச்சி... அதான் அடுத்த பேருந்துல போகலாம்னு விட்டுட்டோம்" எனக்கு அப்பா மீது ஒரே கோபம்... கூட்டமா இருந்தா என்னவாம்?! ஏறி போயிற்றுக்கலாம்ள னு மனசுக்குள்ளயே நெனச்சிக்கிட்டேன்... சரி அடுத்த பேருந்து எப்ப வரும் எப்ப வரும்னு பாத்துக்ற்றுந்தா அது வந்துச்சி நல்லா ஆடி அசஞ்சி ஒரு 8.30மணிக்கு...

சரி இதுலயாவது எடம் கெடச்சிதா? அதுவும் இல்ல... நாங்க போறதுக்குள்ள ஒரு கூட்டமே வந்து அடிச்சிக்கராங்கப்பா எடம் பிடிக்கறதுக்கு... ஒருத்தர் பொம்பளைங்க இருக்குறாங்கன்னு கூட பாக்காம அவரோட தோள்பட்டைய நல்லா அகலமா விரிச்சிக்கிட்டு பேருந்து ஏறும் வழியில போயி நின்னுக்கிட்டாறு... நின்னுக்கிட்டு ஒரு ஊரையே உள்ள போக சொல்றாரு(அவரோட சொந்தமாம்)... அவங்கள தவிர யாரையும் உள்ள போக விட மாற்றாருங்க! யாராவது உள்ள நுழைய பாத்தா அவங்கள பிடிச்சி தள்ளிப்புட்டு... "அட.. இரூய்யா... நாங்க குடும்பமா வந்திருக்க்ரோம்ங்கராறு..." (அப்போ மத்தவங்கல்லாம் எப்டி வந்திருக்காங்க?)

சரி... ஒரு வழியத்தான் இவர் அடச்சிட்டாறு... இறங்கும் வழின்னு ஒன்னு இருக்கும்ல?! அந்த பக்கம் போகலாம்னு அங்க பாத்தா அங்க இதுக்கு மேல கூத்தாவுல இருக்கு!! ஒரு பாட்டியம்மா ஒரு பெரிய கூடை, அப்புறம் ஒரு மூட்டை, நெறைய சாமான் சேர்த்து கட்டிய ஒரு அன்னக் கூடை, ஒரு பெட்டின்னு எல்லாத்தையும் வழில வெச்சிட்டு ஒரு கூலி ஆள வெச்சி ஏத்திக்கிற்றுக்கு.... சரி... அதோட சாமான் அது என்னவேனா பண்ணிக்கட்டும்ங்க... வேற யாரையும் பேருந்துல ஏற விடமாட்டது... மீறி ஏறலாம்னு போனவங்கள "கட்டையில போறவனே... கண்ணு தெரியல... சாமானெல்லாம் ஏத்தித்தராட்டி போற, செத்த நேரம் காத்துக்கெடந்தா கொரஞ்சியா போயிடுவ?" அப்டின்னு திட்டியே தீக்குது அந்த பாட்டி!!

சரியாப்போச்சு... இந்த கலாட்டா முடியறதுக்குள்ள பேருந்துல ஜனங்க நிரம்பி வழியறாங்க!! அப்பா... அம்மாவைப் பாத்து அடுத்த வண்டியில போகலாமானு கேக்க... எனக்கு கோபம்... முடியவே முடியாது... இதுல எடம் இல்லாட்டியும் பரவால்ல... இந்த பேருந்துலையே போயிடலாம்னு நான் ஒரே அடம் பிடிக்க அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு.... ஒரு வழியா, அந்த பேருந்துல ஏறி நான் அம்மா பக்கத்துலயும், அண்ணா அப்பா பக்கத்துலயுமா நின்னுக்கிட்டோம்...

பேருந்து ஓட்டுனரும் வந்தார்... பேருந்து கொஞ்ச தூரம் போக போக... நிக்க கூட எடம் தராம இடிச்சிக்கிற்றுந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கொரஞ்சிது... ஹப்பாடான்னு கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டுக்கிட்டோம் நானும் அம்மாவும்! இன்னும் கொஞ்ச தூரம் போனப்புறம் பெண்கள் பக்கத்தில் (ladies seat) ரெண்டு எடம் காலியாச்சு... ஆனா... ஒரு எடத்துக்கு பின்னால இன்னொரு எடம்.. அம்மா என்ன உக்கார சொன்னாங்க... நான் நீயும் என் பக்கத்துல உக்காந்தா உக்காந்துக்கறேன் மா... இல்லன்ன உக்கார மாட்டேன் னு நான் சொல்ல அங்கு உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் அம்மா பணிவுடன் கேட்டுக் கொண்டார்... ஆனா, அவங்க ரெண்டு பேருக்குமே ஜன்னலோர இடத்த விட்டு எந்திரிச்சி வர மனசில்லாம முடியாதுநிட்டாங்க...

அம்மாவும்... சரி டா குட்டிமா... அம்மா உன் பின்னாடியே தான உக்காரப் போறேன்... கொஞ்ச தூரத்துல நாம எரங்கிடபோறோம்னு(!) சொல்லி என்ன சமாளிச்சி தனியா உக்கார வெச்சாங்க... சாலை மேடும் பள்ளமுமா இருந்துச்சி... அதனால... பேருந்து ஓட்டுனர் break போட்டு போட்டு ஒட்டிக்ற்றுந்தார்... எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. அம்மா கிட்ட வாந்தி வரமாறி இருக்குமானு நான் சொல்ல... என் பக்கத்துல இருந்தவாங்க கிட்ட அம்மா ஜன்னல் ஓரத்துல இடம் தர சொன்னாங்க... ஆனா... நான் சும்மா சொல்றேன் னு நெனச்சிக்கிட்டு அவங்க... என்னம்மா? என்ன புளுகுற? ஒண்ணா உக்கார எடம் தரலைன்னு இப்டி draamaa போடரியானு கேவலமா கேட்டாங்க... அங்க உக்காந்துக்ற்றுந்த மத்தவங்களும் என் பக்கத்துல உக்காந்துக்ற்றுந்தவங்களுக்கு தான் பரிஞ்சு பேசினாங்க...

அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம கொஞ்சம் போருத்துக்கொமா னு என்னையே சொல்லிட்டாங்க... ஆனா... என்னால முடியல... எவ்ளவோ முயற்சி செஞ்சு பாத்தேன்... கடைசியா தாங்க முடியாம எனக்கு முன்னாடி ஒரு பர்தா போட்ட ஆன்டி யோட தலையில வாந்தி எடுத்துட்டேன்... அப்புறம் என் பக்கத்துல உக்காந்திருந்தவங்க எந்திரிச்சி அய்யே... என்னம்மா இது...? நீ சும்மா சொல்றனில்ல நெனச்சிக்கிட்டேன்... நீ இங்க வா னு அம்மாவுக்கு அவங்க எடத்த விட்டுட்டு பின்னாடி (அம்மா உக்காந்திருந்த எடத்துக்கு ) போயிட்டாங்க... அதுக்கப்றம்... அம்மா வந்து நான் வாந்தி எடுத்தவங்க பர்தாவ தண்ணி ஊத்தி(water bottle எடுத்துட்டு வந்திருந்தோம்) தொடச்சி விட்டாங்க... வாந்தி எடுத்தது எனக்கு அசதியாயிடுச்சி... (பாவம் அந்த பர்தா போட்ட ஆன்டி!!)

அப்புறம் கொஞ்ச நேரத்துல அப்பா நாங்க உக்காந்திருந்த எடத்துக்கு வந்து அடுத்த நிறுத்தத்துல(stop) எறங்கனும்னு சொல்லி எந்திரிச்சி வரச் சொல்லிட்டு போனார்... ஐய்யா...!! வி.ஜி.பி. க்கு வந்தாச்சு... இந்த சந்தோஷத்துல என்னோட அசதிஎல்லாம் பறந்தே போயிடுச்சி...


எங்கள மாறி நெறைய பேர் வந்திருந்தாங்க கூட்டம் கூட்டமா... எல்லாரையும் வரவேர்க்கரதுக்குன்னு வி.ஜி.பி. காரவுங்க 'ஒரு மீச கார மாமாவ வாசல் கிட்டயே நிக்க வெச்சிருந்தாங்க!' அவரோட மீசையப் பாத்தா பயமா இருந்துச்சி எனக்கு... ஆனா... ரெண்டு பசங்க அவர் கிட்ட போயி அவர் மீசைய பிடிச்சி இழுத்தாங்க... ஆனா அவர் அசைய கூட இல்ல... அத பாத்துட்டு நான் அப்பாவ ஏன்ப்பா அவர் செல மாறி நிக்கறாருன்னு நான் அப்பாவ கேக்க... அவர் அப்படி நின்னா தான் அவருக்கு சோறு போடுவாங்கன்னு அப்பா சொல்ல...(சம்பளம் அது இதுனு சொன்னா கொழந்தைக்கு புரியாதேன்னு அப்பா அப்டி சொன்னாருன்னு இப்போ நெனச்சிக்கறேன் நானு) ஐயோ பாவம்னு தோனுச்சி எனக்கு...

சரி னு... உள்ள போனோம்... கொஞ்ச நேரம் விளையாடிட்டு...


அப்புறம் தண்ணில ஆட்டம் போட பீச் கு போனோம்... அண்ணாக்கு தண்ணி ல ஆட பயம்! அதனால வர மாட்டேன்னு சொல்லிட்டான்... சரி அம்மாவோட விளையாடலாம்னு பாத்தா அவங்களும் வர மாட்டேன்ன்கறாங்க... என்னனு கேட்டா புடைவை வீணா போயிடும்ங்கறாங்க... பீச் ல விளையாடுவோம்னு தெரிஞ்சிக்கிட்டே எதுக்கு நல்ல புடைவைய கட்டிக்கணும் இந்த அம்மா? வேற ஏதாச்சும் கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்ல னு கோவம் வந்துச்சி எனக்கு! (அம்மாவும் வந்துட்டா அண்ணா தனியா எப்டி நிப்பான்னு தான் அம்மா வந்திருக்க மாட்டாங்கன்னு அன்னிக்கி எனக்கு தோனல!) அப்பா மட்டும் என் கூட வந்தாங்க... அதுவும் என் கைய கேட்டியா பிடிச்சிக்கிட்டு பாதம் மட்டும் நெனையர அளவுக்கு தான் தண்ணில நின்னுற்றுந்தோம்...





அப்பா.. இன்னும் உள்ள போகலாம்னு நான் சொல்ல... அப்பா... இல்ல மா... அது ஆபத்து... அப்டி போகக்கூடாதுன்னு அவர் சொல்ல எனக்கு வெறுப்பா இருந்துச்சி... அங்கிருந்த மத்தவங்க எல்லாரும் தண்ணில அப்டி ஆடிற்றுந்தாங்க... கொஞ்ச பேர் நீச்சல் அடிக்கறாங்க... கொஞ்ச பேர் குதிச்சு குதிச்சு ஆடறாங்க... இன்னும் கொஞ்ச பேர் பந்து போட்டு விளையாடறாங்க... ஆனா என்னால மட்டும் விளையாட முடியல...

அந்த பாதம் நெனையர அளவுக்கு நின்னது கூட கொஞ்ச நேரம் தான்... ரொம்ப நேரம் தண்ணில ஆடினா(!) ஜலதோஷம் பிடிச்சிக்குமாம்... போயி அம்மாவும் அண்ணாவும் உக்காந்துக்ற்றுந்த மணல்ல அவங்க பக்கத்துல உக்காந்துக்டோம்... வீட்லேருந்து கொண்டு வந்திருந்த அம்மா செஞ்ச ஆளூ சப்பாத்தியும் கொஞ்சம் நொறுக்கு தீனியும் அந்தக் கடலை நான் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்






என் வாய்க்குள் திணிக்கப்பட்டு என் வயிற்றுக்குள் இறங்கியது...

கொஞ்ச நேரம் கழிச்சி... ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்தவர் "நேரம் ஆயிடுச்சி, கெளம்பு கெளம்புன்னு எல்லாரையும் துரத்த ஆரம்பிச்சார்..." இதென்ன? அதுக்குள்ளே நேரம் ஆயிடுச்சானு நான் யோசிக்கரதுக்குள்ள அப்பா அம்மாவையும் எங்களையும் வாங்க வாங்க போகலாம்னு கிளப்பினார்...! அம்மா என்னோட கைய பிடிச்சிக்கிட்டு நடந்தாங்க... பீச்ச விட்டு போக மனசே இல்லாம திரும்பி திரும்பி அந்தக் கடலையே மொறச்சி மொறச்சி பாத்துக்கிட்டே நடந்தேன் நான்...

வி.ஜி.பி.ya விட்டு வெளில வந்துட்டோம் நாங்க... பேருந்து நிலையத்துக்கு போனா அங்க ஏற்க்கனவே கூட்டம் அலை மோதுது... எங்க கூட வி.ஜி.பி. லேருந்து வந்த கூட்டம்... போதா குறைக்கு ஒரு மணிநேரமா எந்த பேருந்தும் வரலையாம்... என்ன பண்றது? சரி... எப்போ வருதோ வரட்டும்னு நின்னுற்றுந்தோம்... அங்கிருந்த கூட்டம் இன்னும் ஏறிக்கிட்டே இருந்துச்சு... ஒரு வழியா பேருந்தும் வந்துச்சி... ஆனா... எங்களுக்கு முன்னாடியே ஒரு கூட்டம் போயி ஏறிட்டாங்க... நிக்கறதுக்கு கூட எடமில்லாம ஜன்னல், கதவு(ஏறும்,இறங்கும் வழி) இதையெல்லாம் வேற பிடிச்சிக்கிட்டு தொங்கராங்கப்பா... அய்யய்யோ... பாக்கறதுக்கே பயம்மால இருந்துச்சி...!!





இவ்ளோவுக்கும் அங்கிருந்த பாதி கூட்டம் தான் ஏற முடிஞ்சிது அந்த பேருந்துல!
எப்டியோ ஆடி அசஞ்சி அந்த பேருந்து கிளம்பிடுச்சி... சரி... அடுத்த பேருந்து எப்ப வரும்டா சாமின்னு காத்துக் கெடந்தோம்... ஒரு வழியா அதுவும் வந்துச்சி... நாங்க அதுல ஏறவும் ஏறிட்டோம்!! ஆனா உக்கார இல்ல நிக்கறதுக்கு கூட எடமில்ல எங்க யாருக்கும்... கொஞ்ச தூரம் போனப்ப்ரம் திடீர்னு 'டாம்'னு சத்தம் கேட்டுச்சி... ஓட்டுனர் கீழ ஏறங்கிப்போயி பாத்துட்டு வந்தாரு... திரும்ப வந்து "bus breakdown" ங்க... எல்லாரும் கீழ எறங்குங்க... வேற ஏதாவது பேருந்து வந்துச்சின்னா அதுல ஏத்தி விடரோம்னு சொல்லி எல்லாரையும் கீழ ஏறக்கிட்டார்...

பேருந்து என்னமோ அந்தப்பக்கம் நெறைய வருது... ஆனா... எங்க பெருந்திலேருந்த கூட்டத்த பாத்துட்டு பயந்துட்டான்களோ என்னவோ யாருமே வண்டிய நிறுத்தல!! ஒரு வழியா கஷ்டப்பட்டு ரெண்டு பேருந்து நின்னுச்சி... ஆனா... அதுல ஏற்க்கனவே கூட்டம் நிரம்பி வழிஞ்சிற்றுந்துச்சி... எங்க கூட வந்த கூட்டத்துலேருந்து முக்கால்வாசி கூட்டம் அந்த 2பேருந்துகல்ளையும் ஏறிப் போயிட்டாங்க... மீதி பேர் அந்த வழில போன லாரில ஏறிப் போயிட்டாங்க...

ஆனா... அப்பா இதேதுளையும் ஏற மாட்டேன்னு சொல்லிட்டார்... கொழந்தைங்க இருக்காங்க.. அவங்கள கூட்டிக்கிட்டு எப்டிங்க இந்த கூட்ட நெரிசல்ல போகமுடியும்னு கத்த ஆரம்பிச்சிட்டார் நாங்க வந்த பேருந்தின் ஓட்டுனரிடம்... "ஏன்னா சார்? கைக்கொழந்தை இருக்கற மாறி பேசறீங்க? இவ்ளோ பெரிய பசங்களா இருக்காங்க!னு" அவர் சொல்ல... அப்பாவுக்கு கோபம் வந்துடுச்சி... என்னங்க இப்டி பேசறீங்க? நாங்க பைசா குடுத்து பயணச்சீட்டு வாங்கி இருக்கோம்... நீங்க நாங்க எறங்க வேண்டிய எடத்துல கூட்டிட்டு போயி எறக்கித்தான் ஆகணும்... இல்லன்னா நான் கன்ஸ்யுமர் கோர்ட் கு போவேன்னு வாதாட... பேருந்து ஓட்டுனர் பயந்து விட்டார்... சரி அப்போ கொஞ்ச நேரம் காத்துக்ற்றுங்க சார்... மெக்கானிக் க கூப்ற்றுக்கோம்... வந்துடுவார்... அப்டின்னு சொல்லிட்டு போயிட்டார்... அப்புறம் அந்த மெக்கானிக் வந்து பேருந்தை சரி செய்து தந்தப்புறம் நாங்க நாலு பேர் மட்டும்(எங்கள இடிக்கவும் ஆளில்ல... ஜன்னல் எடம்னு சண்ட போடவும் ஆளில்ல...!!) அந்த பேருந்துல பயணம் செஞ்சி எங்க ஊரு பேருந்து நிலையத்துக்கு வந்து சேந்தோம்... :-)