Wednesday, July 22, 2009

எங்க நாய்க்குட்டிய சாப்ட வெக்க நாங்க நாயா பேயா அலையனுமுங்க!!


என்னம்மா அலம்பல் பண்ணும் தெரியுமாங்க என் நாய்க்குட்டி.. அது எங்க வீட்டுக்கு வந்தப்ப 2வாரக்குட்டிங்க... அதனாலேயே எங்கம்மா அதுக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க... நேரம் பாத்து பாத்து அதுக்கு சாப்பாடு போடுறது... அதுவும்... எப்டி தெரியுமா?? கீழ உக்காந்துக்டு அதோட கிண்ணத்த கைல பிடிசிக்க்டு சாப்டுடா செல்லம் சாப்டுனு சொல்லி சொல்லி சாப்ட வெப்பாங்க...!!

இது இப்டியே போயிற்றுந்துசுங்க.. நாளாக நாளாக எங்க நாய்க்கு(விக்கி) இது நல்லா பழகிடுச்சு... அம்மா கீழ உக்காந்துக்டு கைல கிண்ணத்த பிடிச்சிக்டு குடுத்தாத்தான் சாப்டும்.. இல்லன்னா எவ்ளோ நேரம் ஆனாலும் அப்டியே சாப்டாமலே இருக்கும்... இதுல.. சாப்பாடு கலந்து 3மணிநேரத்துக்கு மேல ஆயிடுச்சின்னா அத தொடவே தொடாது!! வேற புதுசா கலந்துக்டு வந்து அது கிட்ட கெஞ்சின்றுக்கணும்! சரி.. அது போகட்டும்...

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்கப்பா...

கொஞ்ச நாள் கழிச்சி அதுக்கு அம்மா முகத்தையே பாத்து சாப்டு சாப்டு போர் அடிச்சிருக்கும் போல..!! எங்க எல்லாரையும் ஆட்டத்துல சேத்துக்கிச்சு... அம்மா உக்காந்துக்டு சாப்பாடு கிண்ணத்த பிடிச்சிக்குவாங்களாம், நானோ- இல்ல அண்ணாவோ -நாங்க ரெண்டு பேரும் இல்லன்னா எங்க அப்பாவோ அம்மா பக்கத்துல நின்னுக்டு அது(விக்கி) சாப்டறத பாக்கனுமாம்!!

அட!! நிக்கறது பரவால்லீங்க... அது சாப்டு முடிக்கிற வரைக்கும் வெச்ச கண்ணு எடுக்காம அதஎத் தான் பாத்துக்ற்றுக்கணும்!! சாப்டும் போது நடு நடுவுல அது நிமிந்து பாத்து அதைத் தான் பாத்துண்டிருக்கொமா இல்ல வேற எங்கயாவது பாக்ரோமானு "நோட்டம்" விடும்... அது பாக்கும் போது நாங்க... சரி சரி.. சாப்டுமா... "செல்லம்... என் பட்டு.. என் குட்டி.." இப்படிலாம் சொல்லணும்... சொன்னோம்னா சாப்டறத continue பண்ணும்!!

அப்டி இல்லாமவேற எதையாவது பாத்தோம்னா அவ்ளோதான்... சாப்டறத நிறுத்திடும் நிறுத்திப்புட்டு பெரிய மேதாவி மாறி அங்கிருந்து எந்திரிச்சி போயிடுமுங்க!! அப்புறம் அது பின்னாடியா 'நாயா பேயா 'அலையனும் அத சாப்ட வெக்கறதுக்கு!! இதையெல்லாம் நான் எங்கிட்டு போயிச் சொல்ல?? நீங்களே சொல்லுங்க!!

இந்த அநியாய அக்ரமத்த இது இரெண்டு வாரக் குட்டியா இருந்தப்போலேருந்து இன்னிக்கி(எப்டியோ எனக்கு கல்யாணமாகி வந்துட்டதனால நான் தப்பித்தேன்!) வரைக்கும் செஞ்சிக்க்டு இருக்குங்க!! என்னோட அண்ணனும் U.S. க்கு போயிட்டான்.. அதனால அவனும் பிழைத்துக்கொண்டான்.. பாவம், எங்க அம்மாவும் அப்பாவும் தான் எங்க விக்கி கிட்ட கெடந்து தவிக்கறாங்க!!