Monday, July 27, 2009

ரோஜா தன்னைச் சூடும் பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்....


ரோஜா... தன்னைப் பறித்து அழகு பார்த்து பின் அவள் தலையில் சூடிய பெண்ணைப் பார்த்துச் சொன்னதாம்...



உன் ஆசைத் தீண்டல்களும்
என் கூச்ச சிணுங்கல்களும்...

உன் இதமான உரசல்களும்
என் செல்ல முனகல்களும்...

என்றும் மறவா உன் மென்மையான கூந்தலும்,
அழகான ஸ்பரிசமும்...
என்றுமே எனக்கு மட்டுமே சொந்தமானது!!

எனக்கே உரியது!!
வேறு யாருக்கும் நான் விட்டுக்கொடுக்க
முடியாதது, விரும்பாதது!!