Monday, July 27, 2009

உயிரோட்டமற்ற நொடி..!!



என்னவர் என்னை விடுத்து பனி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த வேளையில் மழை வந்து கொண்டிருந்த சமயம் நான் கிறுக்கியது....!!


நீல வானம் கரு கருக்க...


பூமியைச் சுட்டெடுக்கும் சூரியன் ஓய்வெடுத்தது...!!



குளிர்ந்த நீரால் குளித்துப்


புத்துயிர் பெற்ற பூக்கள் சிரிக்கின்றன..!!


அதனை மேலும் சிரிக்க வைக்க...


மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன...!!



ஆயினும்...



இன்னொடிக்கு உயிரோட்டம்தர


என்னுடன் என்னவன் இல்லையே!!


என்ன செய்ய?!



-பிரியங்கா