Wednesday, July 29, 2009

ஜோடிப் புறாவில் ஒரு புறா!!


மேகம் கருத்து இடி இடிக்க
பூலோகம் இருட்டிட
மின்னல் கண் சிமிட்டி
அவ்விருளை விரட்டிட
அதிகாலை மழை பொழிகிறது!!



மரங்களும் செடிகொடிகளும்
மழையின் வருகையை தத்தம்
தலையசைத்து வரவேற்றன!!



பூத்துக் குலுங்கிய பூக்கள்
மேலும் சிரித்திட
சில்லென்ற காற்று என்
மேனியெங்கும் பரவிட
மெய்சிலிர்த்து நான் நின்றிட...







ஒரு ஜோடிப்புராவில் ஒன்று
மட்டும் தனியே கடந்து தவித்தது...
ஏ புறாவே உன் தவிப்பு என்னவோ?!