Wednesday, July 22, 2009

பெயர் சூட்டு விழா!!


ஹ்ம்ம்ம்ம்ம்ம்... நாய்க் குட்டி வீட்டுக்கு வந்தாச்சு! அதுக்கு சாப்பாடு குடுத்து, அதோட விளையாடவும் ஆரம்பிச்சாச்சு... அடுத்து அதுக்கு ஒரு பெயர் வெக்கணுமே!! என்ன பேர் வெக்கலாம்? யோசிக்க ஆரம்பித்தேன்.. யோசித்துக் கொண்டிருக்கையில் எதிர் வீட்டு ஆன்டி... என்னம்மா? எதோ யோசிக்கற போலனுகேட்க நானும் நாய்குட்டிக்கு பெயர் வைக்க போறேன் ஆன்டி... என்ன பேர் வெக்கலாம்னு யோசிச்சிற்றுக்கேன்னு சொன்னேன்... ! அதுக்கு அவங்க என்ன பாத்து சிரிச்சிட்டு, நல்ல பொண்ணுமானு சொல்லிட்டு சரி சரி... நாய்க்கு 'இ' இல்லனா 'ஐ' னு முடியற மாறி தான் வெக்கணும்.. அப்ப தான் அதுக்கு புரியும்னு சொன்னாங்க...



அதுவும் சரி தான் நான் கூப்பிடுவது அதுக்கு புரிஞ்சா தானே நான் அதைக் கூப்டும் போது அது திரும்பி பாக்கும்? சரி ஆன்டி னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டேன்.. பள்ளிக்கு நேரம் ஆகிவிடவே நான் குளித்து கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டேன்... என் தோழி ரேவதியிடன் என் குட்டி நாயைப் பற்றிச் சொன்னேன்... அதற்க்கு பெயர் வைக்க வேண்டும் என்றும் சொல்லி அவளையும் யோசிக்கச் சொன்னேன்... அவள் யோசித்து விட்டு இரண்டு மூன்று பெயர்களைச் சொன்னாள்... இதற்கிடையில்.. எங்களுக்கு அன்று "history paper"-- மாதத்தேர்வுக்கான விடைத்தாளைக் கொண்டு வந்து கொடுத்தார் ஆசிரியை..





எனக்கு ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவன் மீது வெறுப்பு... அவன் பெயர் விக்ரம்.... eppothum என்னுடன் போட்டி போட்டுக் kondiruppaan... entha vidaithaal koduththaalum சரி( தினந்தோறும் வைக்கும் சின்ன தேர்வாக இருந்தாலும்...) அவன் தாளையும் என் தாளையும் வைத்துப் பார்பான்.. எனக்கு அவனை விட ஒரு மதிப்பெண் அதிகம் வந்திருந்தால் கூட அவனால் பொறுக்கவே முடியாது! உடனே அந்த ஆசிரியரிடம் சென்று சண்டையிடுவான், என்னை விட ஒரு மதிப்பென்னாவது அதிகமா ஏதாவது ஒரு கேள்விக்கான விடையில் வாங்கிவிட்டு தான் வகுப்பிற்கே வருவான்!





அன்றும் அப்படித் தான் செய்தான்... history paper இல் என் மதிப்பெண் 82... அவன் மதிப்பெண் 80... எண்கள் ஆசிரியை எல்லோருக்கும் அவரவர் தேர்வுத் தாளைக் கொடுத்து விட்டு இறுதியில் அனைவரின் பெயர்களையும் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் படித்து விட்டுச் சென்றார்.. என் மதிப்பெண்ணைக் கேட்ட உடன் விக்ரம் நான் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வந்து என் விடைத்தாளைக் கேட்டான்.. எதற்கு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட நான் தர மாட்டேன் போ என்று சொன்னேன்.. ஆனாலும் அவன் விடவில்லை.. என் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு வகுப்பின் வெளியே ஓடிவிட்டான்... நானும் இந்த முறை அவனை விடுவதாயில்லை, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்!





அவன் நேராக எங்கள் history ஆசிரியையிடம் தான் சென்றான்.. மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும் எங்களைப் பார்த்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை... நான் பேச ஆரம்பிப்பதற்குள் அவன் முந்தினான்... அதெப்படி நீங்க எனக்கு இவளை விட இரண்டு மதிப்பெண் குறைவாக போட்டீங்கன்னு கேட்டான்.. ஆசிரியைக்கு ஒன்றும் விளங்கவில்லை... ஆனால் அவனை கோபமாக முறைத்தார்! அதற்குள் அங்கு வந்த எங்கள் தமிழ் ஆசிரியை(சின்ன வகுப்பிலிருந்தே எங்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவர்!) என்ன விக்ரம்? ஆரம்பிச்சிட்டியா திரும்பவும் என்று கேட்டு விட்டு history ஆசிரியையிடம் அவனைப் பற்றி சொல்லி.... "அவன் நீங்கள் அவனுக்கு ஒரு மதிப்பெண் ஆவது அந்தப் பெண்ணை விட அதிகமா போடலைன்னா விடமாட்டான்" என்றார்... என்ன? ஆசிரியையிடம் இப்படி பேசறான்? அவன் சண்டையிட்டால்....! அதற்க்கு நான் ஆள் இல்லை என்று சொல்லி விட்டு, விக்ரமைப் பார்த்து இன்னொரு முறை இப்படி என் கிட்ட வந்தீன நான் உன்ன பிரின்சிபால்(principal) கிட்ட கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!! ஹப்பா!! என்ன ஒரு கோபம்? என்ன ஒரு வெறுப்பு? நான் சிரித்துக் கொண்டே என் விடைத் தாளை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றேன்.. ஆனால் எனக்கு அவன் செய்த இந்த வேலை(விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது) எனக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது... இவனை நல்லா வெறுப்பேத்தனும்னு முடிவு பண்ணேன்!





vikram என் வீட்டின் அருகில் தான் வசிக்கிறான்.. (விக்கி என்று தான் அவன் வீட்டில் அழைப்பார்கள்) ... அவனுக்கு நாய் என்றாலே பிடிக்காது... அதை பயன் படுத்திக்கொண்டு என் நாய்க்கு நான் விக்கி என்று பெயர் வைக்க முடிவே பண்ணிட்டேன்... மாலை வீட்டிற்குச் சென்றவுடன் அம்மாவிடம் என் நாய்க் குட்டிக்கு விக்கி என்ற பெயர் வைக்கப்போவதாகச் சொன்னேன்.. அம்மாவுக்கும் அந்தப் பெயர் பிடித்தது! (பெயர்க் காரணம் தெரியாதலால்..)



அண்ணாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்த பிறகு பெயர் சூட்டு vizhaa அரங்கேறியது.. ஆனால் விக்ரமை வெறுப்பேற்ற எனக்கு மனது வரவில்லை! எதோ ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது எனக்குள்!!